"சிகரெட் "
"ஆமா விட்டுட்டேன் தான். எப்போவாவது பிடிப்பேன். ரொம்ப டென்ஷனா இருக்கும்போது இல்லன்னா ஏதாச்சும் தீவிரமா யோசிக்கும்போது"
"இப்போ பிடிக்குறதுக்கு என்ன காரணம்?"
"ரொம்ப குளிருதுல்ல அதான்"
"இந்த ஆம்பளைங்கள ஏன் எனக்கு பிடிக்கிறது இல்லனு உனக்கு தெரியுமா வசந்த்?"
"ஏன்? சிகரெட் பிடிக்கிறதாலயா?" வசந்த் கிண்டலாக சிரித்தான்.
"இல்லை. அவங்களால சொன்ன வார்த்தையை காப்பாத்த முடியாது. சூழலுக்கு ஏத்தாபோல தங்களை மாத்திப்பாங்க. தான் செய்யுற தப்புக்கு லாஜிக்கான காரணம் எப்போவுமே வச்சிருப்பாங்க"
"நான் சிகரெட் பிடிக்குறதுக்கும்.நீ சொல்லுற காரணங்களுக்கும் என்ன சம்மந்தம்?"
"நீ சிகரெட் விட்டுட்டேன்னு சொன்னியே அதுக்கு சொன்னேன்"
"உன் முன்னாடி சிகரெட் பிடிச்சது ஒரு குற்றமா" என்றபடி சிகரெட்டை எரிச்சலோடு தூக்கி போட்டான் வசந்த்.
"இதுவும் ஆம்பளைங்க திமிர் தான். நான் சொன்ன உடனே சிகரெட்டை தூக்கி போட்டுட்ட. நீ மறுபடியும் சிகரெட் பிடிக்காம விட்டுடுவியா?"
"அம்மா தாயே, நாம ஜானை சமாதானம் செய்ய வந்திருக்கோம். ஜான் நம்மள சமாதானம் செய்யுற அளவுக்கு நிலைமை போயிடப்போகுது, வா" என கூறியபடி ஜான் வீட்டின் காலிங்பெல்லை ஒலிக்க செய்தான்.
சில நொடிகளில் கதவைத் திறந்து ஜான் வெளியே வந்தான்.
"ஹாய் ஜான்! எப்படி இருக்க?" சிரித்த முகத்தோடு கேட்டான் வசந்த்.
"யார் நீங்க?"
ஜெஸிகாவும் வசந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"கேக்குறேன்ல யார் நீங்க? எதுக்கு வந்திருக்கீங்க?"
"சாரி சார். என் நண்பன் ஜான்கிட்ட இரண்டாயிரம் டாலர் கடன் வாங்கியிருந்தேன். அதை கொடுக்க தான் வந்தேன்" என பர்ஸை திறந்து பணத்தை எண்ணினான் வசந்த்.
"ஒரு நிமிஷம்" என ஜான் கதவை சாத்தினான். அடுத்த நொடி மீண்டும் கதவைத் திறந்து வெளியே வந்தான்.
"ஹே வசந்த் எப்படியிருக்க? இப்போ தான் உன் நண்பனை பார்க்க தோணுச்சா?" என வசந்தை ஆரத் தழுவிக் கொண்டான்.
"பணத்தை திருப்பி தர வந்திருக்கியாமே?" என இரண்டாயிரம் டாலரை வாங்கிக் கொண்டு வீட்டினுள் சென்று மீண்டும் கதவை சாத்திக் கொண்டான் ஜான்.
"தனியா இருக்கிறதால பைத்தியம் ஆகிட்டானா?" என ஜெஸிகாவிடம் கேட்டான் வசந்த்.
எனக்கென்ன தெரியும் என்பது போல் சைகை காட்டினாள் ஜெஸிகா.
கதவு திறக்கப்பட்டது. "நீங்க இன்னும் கிளம்பலையா?"
ஜெஸிகாவும் வசந்தும் ஜானை எரித்து விடுவதை போல் பார்த்தனர்.
தொடரும்...
{kunena_discuss:983}