22. நீதான் என் சந்தோசம் - ராசு
மாலை வரை மாமியார் வீட்டில் இருந்துவிட்டு இரவுக்கு மனைவியை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான் மனுதர்மன்.
அவர்கள் கிளம்புவதற்கு முன்பு தான் திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டுதல் வைத்ததாகவும், அதை நிறைவேற்ற போக வேண்டும் என்று ஜெயசுதா சொல்லியிருந்தாள்.
அவர்களுக்கு எப்ப வசதிப்படுமோ சொல்ல சொல்லியிருந்தாள்.
அவனும் சரியென்றுவிட்டு கிளம்பி வந்துவிட்டான்.
தன் வீட்டில் உள்ளவர்கள் சந்தோசமுடன் வழியனுப்ப வேறு வழியில்லாமல் கணவனுடன் கிளம்பிவிட்டாள் நேசமலர்.
...
This story is now available on Chillzee KiMo.
...
கட்டவில்லை.
திருச்செந்தூரில் தனது நண்பனின் விடுதி ஒன்றில் தங்க ஏற்பாடு செய்திருந்தான்.
தங்களது உடைமைகளை அங்கே வைத்தவர்கள் குளித்துவிட்டு உடுத்துவதற்கு மட்டும் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பினர்.
கோயில் கோபுரத்தை பார்த்த உடன் கண்கள் கலங்க கைகூப்பி தொழுதாள் ஜெயசுதா.