Chillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதைப் போட்டி முடிவுகள்
ஹாய் பிரெண்ட்ஸ்,
காணாய் கண்ணே – போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.
போட்டிக்காண கேள்வி – கதையின் கரு என்னவாக இருக்கும்.
இந்தக் கதையின் கரு – வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வை ஒட்டிய முன்னும் பின்னுமான நிகழ்ச்சிகள். அதை நாயகிக்கு முன்ஜென்மத்தில் நிகழ்ந்ததாகவும், அது இந்த ஜென்மத்தில் அவளுக்கு மட்டுமே நினைவு வரும். அதை நாயகனுக்கு எடுத்துச் சொல்லி, அவனோட அவள் வாழ்வை இணைத்துக் கொள்வது. இதுதான்.
போட்டியில் பங்குப் பெற்ற அனைவருக்கும் நன்றிகள்.
இதைத் தவிர எபிசொட் கமென்டுகளிலும் தங்கள் ஊகங்களை சொல்லி இருந்தவர்களுக்கும் நன்றிகள்.
என் கதைக் கருவிற்கு மிகவும் ஒத்த கருத்து என்றால் அது ஆதர்வ்ஜோ மற்றும் பத்மினி கருத்துக்கள் சரியாக இருக்கிறது.
இருவருமே உபோயோகித்த ஹீரோயினின் ஹீரோயிசம் தான் முக்கியமான கருத்து.
நான் மிகவும் எதிர்பார்த்தது வரலாற்றுக் கதை என்ற வார்த்தை. அதை அபிமகேஷ் அவர்கள் ராஜா, ராணி கதை என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதனால் பத்மினி, ஆதர்வ்ஜோ இருவரையும் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கிறேன்.
அதோடு அபி மகேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
பரிசு விவரங்களை சில்சீ டீம் அறிவிப்பார்கள்.
கதை படித்துக் கருத்துக்கள் பகிர்ந்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள்.
தொடர்ந்து உங்கள் ஆதரவு எதிர்பார்க்கிறேன்.
நன்றிகள் பிரென்டஸ்.
தேவி
வாழ்த்துக்கள் பத்மினி & ஆதர்வ் 👏👏👏. இருவருக்கும் தலா ரூபாய் 250/- பரிசாக வழங்கப் படும்.
சுறுசுறுப்பாக வெற்றிப் பெற்றவர்களை தேர்வு செய்து பகிர்ந்த தேவிக்கு Chillzee டீமின் சார்பில் வாழ்த்துக்கள்!!! 🤗🤗🤗
போட்டியில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும் Chillzee டீமின் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
இனி வரும் போட்டிகளிலும் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு, எழுத்தாளர்களின் மனதில் நிலைத்திருக்கும் வகையிலான இனிய & சுவாரசியமான அனுபவத்தை அவர்களுக்கு கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம் 😍😍😍😍😍😍
{jcomments on}
{kunena_discuss:1249}