குட்டிக் கதைகள் – 69. புத்திசாலி ஆந்தை
ஒரு பெரிய மரத்தில் ஒரு ஆந்தை வாழ்ந்து வந்தது. அது ஒவ்வொரு நாளும் தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை கூர்மையாக கவனித்தது.
ஒரு நாள் ஒரு முதியவர் கனமான பையை தூக்கிப் போக ஒரு சிறுவன் உதவுவதை பார்த்தது.
இன்னொரு நாள் ஒரு சிறுமி தன் அம்மாவிடம் கோபப்பட்டு கத்துவதைப் பார்த்தது.
அந்த ஆந்தை எத்தனை அதிகமாகப் பார்த்ததோ, அத்தனை குறைவாகப் பேசியது.
நாட்கள் போகப் போக அது மிகவும் குறைவாகப் பேசியது ஆனால் இன்னும் அதிகமாக சுற்றி நடப்பதைக் கவனித்தது! வித விதமான மக்கள் பேசுவதையும், கதைகள் சொல்வதையும் அமைதியாக கேட்டது.
ஆந்தையை சுற்றி இருந்த பலரின் வாழ்க்கை வாழ்க்கை மாறுவதையும் அது பார்த்துக் கொண்டே தான் இருந்தது. சிலர் நல்லவர்களாக மாறினார்கள், சிலர் இன்னும் கெட்டவர்களானார்கள்.
ஆனால், ஆந்தையோ அவர்களை கவனித்தே ஒவ்வொரு நாளும் இன்னும் புத்திசாலியாக மாறியது!!!
கருத்து:
குறைவாக பேசி, அதிகமாக கேளுங்கள். இது உங்களை புத்திசாலியாக மாற்றும்.