(Reading time: 2 - 3 minutes)

குட்டிக் கதைகள் – 80. மீனவனின் புத்திசாலித்தனம்

ரு மீனவன் ரொம்ப நேரமாக மீன் பிடித்துக் கொண்டிருந்தான்.

  

ஆனால் அவனிடம் ஒரு மீனும் சிக்கவில்லை!

  

தன் அதிர்ஷடத்தை நொந்துக் கொண்டே அவன் வலையை இழுத்தப் போது ஒரு சிறிய மீன் அவன் வலையில் சிக்கிக் கொண்டது.

  

"என்னை இப்போது வலையில் இருந்து எடுத்து விட்டு விடு. சில நாட்களில் நான் பெரிய மீனாக வளர்ந்து விடுவேன். அதற்குப் பிறகு நீ என்னை மீண்டும் பிடிக்கலாம்." என்று மீனவனிடம் சொன்னது அந்த சிறிய மீன்.

  

“இல்லை, உன்னை அப்படி விட முடியாது. இப்போது உன்னை நீரில் விட்டால் மீண்டும் உன்னை பார்க்கவே முடியாது என்று எனக்குத் தெரியும்” என்றான் மீனவன்!

  

கருத்து:

  

நாளைக்குக் கிடைக்கும் பலாக்காயை விட இன்று கிடைத்திருக்கும் களாக்காய் மேல்!!!

  

அதாவது,

  

இன்னும் சிறப்பான பொருள் வேண்டும் என்ற பேராசையில் கையில் இருப்பதை இழப்பதை விட, இருப்பதை வைத்து திருப்தி அடைவது நல்லது!

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.