வினோத செய்திகள் - 27 வருட உறைந்த கரு முட்டையில் இருந்து பிறந்த குழந்தை
பிறந்த உடனேயே இந்த குழந்தை சாதனை படைத்துள்ளது.
மோலி கிப்சன் என பெயரிடப் பட்டுள்ள இந்த பெண் குழந்தை 27 ஆண்டுகளாக உறைந்த நிலையிலிருந்த கருவிலிருந்து பிறந்திருக்கிறாள்.
இது தான் இன்று வரை அதிக வருடம் உறைந்த நிலையில் இருந்து பிறந்த கருவிற்கான சாதனை.
மோலியின் அக்கா எம்மாவும் இதேப் போல உறைந்த கருவில் இருந்து பிறந்தவள் தான். இப்போது மோலி தன் அக்காவின் சாதனையை முறியடித்து பிறந்திருக்கிறாள்.
மோலி, எம்மா இருவரும் பிறக்க காரணமான இரண்டு கரு முட்டைகளும் கடந்த 1992 வருடம் தானமாக வழங்கப்பட்டு, உறைந்த நிலையில் வைக்கப் பட்டிருந்தவை.
இந்த குழந்தைகளின் பெற்றோர், டினாவும், பென்னும் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தார்கள். இப்போது அந்த உறைந்த கருக்களை தத்தெடுத்து பெற்றோராகளாகி இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் IVF முறையில் கருத்தரிக்கும் போது கருக்களை தானமாக வழங்க முடியும்.
அப்படி வழங்கப்படும் கருக்களை வேறு ஒரு ஜோடிக்கும் வழங்கும் வரைக்கும் உறைந்த நிலையில் வைத்து பாதுகாக்கிறார்கள்!
அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்