(Reading time: 2 - 3 minutes)

வினோத செய்திகள் - லண்டன் காலேஜுக்கு போன காட்டு நரி!

மீபத்தில் ஒரு லண்டன் காலேஜ் ஆசிரியர்கள் காலையில் காலேஜிற்கு வந்தப் போது, பார்த்த காட்சி அவர்களை அசர வைத்தது.

  

ஒரு காட்டு நரி ஒன்று ஆசிரியர்களின் ஸ்டாப் ரூமுக்குள் வந்து, அங்கிருந்த சோபாவில் வசதியாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தது.

  

மேற்கு லண்டனில் உள்ள ட்விகன்ஹாம் பகுதியில் உள்ள செயின்ட் ரிச்சர்ட் ரெனால்ட்ஸ் கத்தோலிக்க கல்லூரியின் பயாலஜி ஆசிரியை தூங்கும் நரியின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.

  

அந்த ஆசிரியரும், இன்னுமொரு ஆசிரியரும் அறையின் கதவைப் பூட்டிவிட்டு உதவிக்கு அலுவலர்களை தொடர்பு கொண்டனர்.

  

காலேஜ் கட்டிடத்தின் அலாரங்கள் ஒலிக்கவில்லை, எனவே அதிகாலையில் பள்ளியைத் திறந்தபோது நரி உள்ளே விலங்கு வந்திருக்கலாம் என்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

  

லண்டனின் விலங்கு மீட்புப் பணியாளர்கள் விரைவாக வந்து நரியை பிடித்து, பரிசோதிக்க கால்நடை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர்.

 

நரி காலேஜில் படிக்க வந்ததா என்பது பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை!!!!

   

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.