Chillzee WhatsApp Specials - உங்கள் கணவரை நேசியுங்கள்!
கணவன் 'பெர்பெக்ட்' ஆக இருப்பதால் விவாகரத்து கேட்கும் மனைவி
ஒரு வினோதமான விவாகரத்து வழக்கு பற்றி செய்தி வெளியாகி இருக்கிறது.
ஒரு பெண் தன் கணவனிடம் விவாகரத்து கோரியுள்ளார். தன் கணவர் தன்னுடன் சண்டை போடவில்லை என்ற அடிப்படையில்.
திருமணமாகி 18 மாதங்களுக்குப் பிறகு அந்த பெண் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
கணவரின் காதல் தன்னை 'மூச்சுத் திணற' செய்வதாக அந்தப் பெண் கூறி இருக்கிறார்.
"என் கணவர் என்னிடம் கோபமாக கத்தவில்லை, எந்தவொரு பிரச்சினையிலும் அவர் என்னை வருத்தப் படுத்தவில்லை. அவர் எனக்காக சமைக்கிறார், வீட்டு வேலைகளையும் செய்ய எனக்கு உதவுகிறார், "என்று அந்த பெண்மணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
"நான் தவறு செய்யும் போதெல்லாம், என் கணவர் எப்போதும் என்னை மன்னிப்பார். நான் அவருடன் சண்டைப் போட விரும்பினேன். இப்படி எப்போதும், எதற்கும் ஒப்புக் கொள்ளும் கணவருடனான வாழ்க்கை எனக்கு தேவையில்லை." என்றும் அந்த பெண்மணி சொல்லி இருக்கிறார்!
😳🙄
Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to +19085470867