Chillzee WhatsApp Specials - சில அருமையான, சிந்திக்க வேண்டிய விஷயங்கள்...
"சில அருமையான, சிந்திக்க வேண்டிய விஷயங்கள்..."
*********
🌝 முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்..
🌝 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்...."
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்..........."
🌝 தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது
🌝 கல்வி கற்க புத்தகங்களை விட 'நோட்டுக்களே' அதிகம் தேவைப்படுகின்றன.!
🌝 வாழ்க்கை ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி! ஒவ்வொருத்தர் கண்ணுக்கு ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும்!
ஒரு சிலருக்கு புரியாம கூட போகும்..!!!
🌝 மதிப்பே இல்லாத பூஜ்ஜியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி தன் மதிப்பை கூட்டியவன் தான் இந்தியன்!!
🌝 பாம்புக்கு காது கிடையாது எனில், தவளை எப்படி தன் வாயால் கெடும்? சொல்லுங்க.??
🌝 சந்தோசமாக உள்ளவனிடம் மட்டுமே இவ்வுலகம் நலம் விசாரிக்கும்!
கஷ்டத்திலே இருப்பவனோட தொலைபேசி எண் கண்டிப்பாக பழைய செல்போனோட தொலைஞ்சு போயிருக்கும்...
🌝 பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இருப்பதில்லை!
🌝 காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.
🌝 திருக்குறளை, வாழ்றதுக்காக படிச்சவங்கள விட..! "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்கதான் அதிகம் பேரு...!!!!!
🌝 அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது!
அதற்கு பல தோல்விகளும், சில துரோகிகளும் தேவை...!!!!
🌝 Money மட்டுமே மதிக்கப்படுகிறது... மனிதம் பலரால் மிதிக்கப்படுகிறது..
🌝 நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :-
நம்மகிட்ட ஒன்னும் இல்லாம இருக்கும் போது..... நம்மோட பொறுமை..!
நம்மகிட்ட எல்லாம் இருக்கும் போது..... நம்மோட நடத்தை..!
🌝 5000 ரூவா சம்பளம் வாங்கும்போது இருந்த பற்றாக்குறை,
லட்ச ரூவா வாங்கும்போது வந்தா நாமதான் வாழ தெரியாம வாழ்றோம்னு அர்த்தம்....!!!!
🌝 எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை உண்டு...!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்...!!!
🌝 எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள். ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.
🌝 நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை...!!!!
🌝 போக்குவரத்து விதிகளை சாகசமாய் மீறும் எமக்கு...
அடுத்தவர் மீறுவதைக் கண்டதும் உடனே கோபம் வருகிறதே.... ஊருக்கு தான் உபதேசமோ????
🌝 பணம் மரத்தில் காய்க்குமானால், மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்...
🌝 நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால், 'தன்னடக்கம்' என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம்.
Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to +19085470867