TV Serials - தி கிரவுன் - நெட்ஃப்ளிக்ஸ் [ The Crown - Netflix ] - சீசன் 1 எபிசோட் 03
2016ல் தொடங்கிய இந்த நெட்ஃபிலிக்ஸ் வெப் சீரீஸின் சீசன் 1 3 ஆம் அத்தியாயத்தின் கதை சுருக்கம் இது. எபிசோட் 2 கதைக்கு தி கிரவுன் - எபிசோட் 2 பக்கத்திற்கு செல்லுங்கள்.
பதினாறு வருடங்களுக்கு முன், 1936 வருடத்தில் தான் விரும்பும் விவாகரத்தான அமெரிக்க பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதற்காக அரச பதவியை விட்டுக் கொடுக்கிறார் எட்வர்ட். இதனால் தான் அவருடைய தம்பி ஜார்ஜ் மன்னராகிறார்.
நிகழ்காலத்தில் ஜார்ஜ் இறந்து விட்டதால் அவருடைய இறுதி சடங்கிற்கு எட்வர்டும் வருகிறார்.
ஜார்ஜ் மன்னரின் அம்மா, மனைவி என அனைவருமே எட்வர்ட் விட்டு தள்ளி இருக்கவே விரும்புகிறார்கள். எட்வர்ட் அவர்களின் நடவடிக்கைகளை கண்டு மனதுள் கோபத்துடன் வெதும்புகிறார். வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்திற்காக அமைதியாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார்.
பீட்டரின் மனைவி அவருடைய தவறான நடவடிக்கை தெரிந்ததால் அவரை விட்டு பிரிந்து செல்கிறார். மார்கரெட் அதற்காக வருத்தப் படாமல் ஒரு நாள் பீட்டரை திருமணம் செய்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறார்.
பிலிப்பின் தந்தை ஒரு பக்கம் இனி அரசக் குடும்பம் தங்களுடைய பெயருடன் (மவுண்ட்பாட்டன்) விளங்கப் போகிறது என்று கொண்டாடுகிறார்.
அந்த கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட ஒருவர் எலிசபெத்தின் பாட்டியிடம் வந்து அதை சொல்கிறார்.
இதற்கிடையில் ராணியாக போகும் எலிசபெத் பிரதம மந்திரி சர்சில்லை சந்திக்க தயாராகிறாள். பிலிப் தன் மனைவியும், குழந்தைகளும் தன்னுடைய குடும்ப பெயரை தொடர வேண்டும் என்று விரும்புகிறார். அதேப் போல தன் குடும்பம் எலிசபெத் ராணி ஆனப் பிறகும் தங்களுடைய தனி வீட்டிலேயே வாழ வேண்டும் என்றும் விரும்புகிறார். இதை எலிசபெத்திடம் சொல்லி சர்ச்சிலிடம் பேச சொல்கிறார்.
எலிசபெத் சர்ச்சில் சந்திப்பின் போது சர்ச்சில் மகுடம் சூடும் விழாவை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்க சொல்கிறார். இது தன்னுடைய பதவியை தக்க வைத்துக் கொள்ள சர்ச்சில் செய்யும் முயற்சி என்பதை எலிசபெத் புரிந்துக் கொள்கிறாள்.
அப்படியே பிலிப் விரும்பும் இரண்டு வேண்டுகோள்களையும் அவரிடம் சொல்கிறாள். ஆனால் சர்ச்சில் அதை ஏற்க மறுக்கிறார். பிலிப் ஐரோப்பியாவை சேர்ந்தவர் என்பதால் அவருடைய குடும்பப் பெயரை இங்கிலாந்து அரசக் குடும்பத்தினர் எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது என்கிறார்.
எலிசபெத் சர்ச்சிலின் வயதைப் பற்றியும், அதனால் அவரை சுற்றி இருப்பவர்களின் கவலைப் பற்றியும் சொல்லி, அதற்கு சர்ச்சில் பக்கம் தான் துணை நிற்பதாகவும், பிரதம மந்திரி