Tamil Jokes 2018 - இவர் தாங்க புத்திசாலி :-) - தேவி
முதலாளி தன் வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கிவரச்சொன்னார்.
"கண்ல போடுர கண்ணாடியா" ன்னு கேட்டதும் முதலாளி கோபத்தில் ......
"யோவ், ஷேவ் பண்றதுக்குய்யா ....கண்ணாடில என் முகம் தெரியுறமாதிரி ஒண்னு வாங்கிவா....." என்று அனுப்பிவைத்தார்.
போன வேலைக்காரன் நீண்ட நேரம் திரும்பவேயில்லை. நீண்ட நேரத்திற்குப் பின் மூச்சுவாங்க வெறுங்கையோடு வந்த வேலைக்காரனிடம் ஏன் கண்ணாடி வாங்கலைன்னு கேட்டார் முதலாளி.
பஜார் முழுக்க அலைஞ்சேன் முதலாளி. ஆனாலும் நீங்க கேட்டமாதிரி கண்ணாடி கிடைக்கல. அதான் வாங்கல என்றான் வேலைக்காரன்.
ஏன், பெருசா இருந்ததா ?
இல்லை, சின்னதாத்தான் இருந்தது.
பிறகு ஏன் வாங்கல ?
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
எந்த கண்ணாடியிலும் உங்க முகம் தெரியல. என் முகம்தான் தெரிஞ்சுது. அதான் வாங்கல !!!!!!!!!
🤐😜😜😜😜
{kunena_discuss:747}