Health Tip # 60 - தலைவலியை அலட்சியப் படுத்தாதீர்கள்!
தலைவலி என்பது இன்று கிட்டத்தட்ட பலருடைய வாழ்வில் அன்றாடம் வருவது என்றாகி விட்டது!
அப்படி தலைவலி வரும் போது அதிகமாக கோபப் படுவது அல்லது மன உளைச்சலுக்கு ஆளாவது என பலவிதமான மாற்றங்களையும் நாம் பார்க்கலாம்.
மூளை தொடர்பான நோயின் அறிகுறியாக இருக்கலாம்
கண், தலையின் பின் பகுதி போன்ற இடங்களில் அதிக வலி ஏற்பட்டால் அதை சாதாரண தலைவலி என்று எண்ணி சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவ வல்லுனர்களை அணுகுவது நல்லது.
ஏனென்றால் இது போன்ற வலி சாதாரண தலைவலியாக இல்லாமல் மூளை சம்மந்தப்பட்ட நோயை காட்டும் அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள்.
கண்கள் சம்மந்தப்பட்ட வலி
கண்களுக்கு அதிக வேலை கொடுத்தால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது.
இதனாலும் தலைவலி பிரச்சனை உருவாகலாம்.
அப்படி தலைவலி அடிக்கடி வந்தால் அதை உதாசீனப் படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும். இல்லை என்றால் இந்த வலி நாளடைவில் தீவீரம் அடைந்து விடும் என்று என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
மைக்ரைன் போல வேறு விதமான தலைவலிகளும் உண்டு!
எனவே தலைவலி என்ற உடன் ஒரு பெயின் கில்லரை எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
{kunena_discuss:1131}