இன்னிக்கு சதுர்த்தி இந்த விநாயகர் சதுர்த்திக்கு காலையில எழுந்து வீட்டை சுத்தம் செஞ்சி, பூஜையறை சுத்தப்படுத்தி, மாக்கோலம் போட்டு பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியைப் பரப்பி அதுக்கு மேல நம்ம வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுதி மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைத்துக் களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைப்பார்கள். பூஜை முடிந்து 3வது நாள் சிலையை கரைக்கறப்ப தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் கிட்டும் .
ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா
எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். மந்திரங்கள் இல்லாமல் எந்த பூஜையும் ஆரம்பம் ஆகாது, முடிவும் பெறாது. பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதனமா படைச்ச படையல்களை கொடுத்துட்டு அப்புறம் கோயிலுக்கு போய் சாமி கும்பிடனும். சாமியை கும்பிடாமல் யாரும் எது செஞ்சாலும் அது தடையாகும்” என சொல்லவும்
செந்தாமரையோ
”உண்மைதான் பூஜை செய்றதுக்கு முன்னாடி சுத்தமான தண்ணி முக்கியம். காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகைனு ஆறு இல்லாதவங்க வீட்ல இருக்கற தண்ணியை புண்ணிய நீரா நினைச்சி சிலையை சுத்தம் செய்யனும் அதுக்கப்புறம்தான் பூஜையே
ஆரம்பமே தண்ணீர். தண்ணீர்லதான் அனைத்து தெய்வங்கள் இருக்கும்னு ஒரு நம்பிக்கையிருக்கு. எல்லா கடவுளும் புனிதநீரில் இருப்பாங்களாம் அந்தத் தண்ணீரை நாம பயன்படுத்தினா தீய சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும். பூஜை முடிஞ்சதும் தீர்த்தமா தர்ற தண்ணியை குடிச்சா அவ்ளோ நல்லதாம். அதே போல தினமும் ஒரு முறையாவது விளக்கு வைச்சா பலன் அதிகமாகுமாம் அந்தளவுக்கு தண்ணீருக்கும் சாதாரண அகல் விளக்கு ஒளிக்கும் சக்தி இருக்கு, எந்த விதமான நிவேதனம் அலங்காரம் செய்ய முடியலைன்னாலும் பிள்ளையார் சிலையை நல்ல தண்ணீர்ல கழுவி சுத்தமாக்கி அவர் முன்னாடி விளக்கு ஏத்தி வைச்சா போதும், அவரோட அருள் பூரணமா நமக்கு கிடைக்கும்”
”ஓ அப்படின்னா நீரும் விளக்கும்தானே பிள்ளையாருக்கு ரொம்ப பிடிக்குமா” என தாரா கேட்க அதற்குள் கௌரியோ
”என் தரப்பு இன்னும் பாக்கியிருக்கு, ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே தனக்கான நட்சத்திரம் ராசிகளை பெற்றிருப்பானாம். அதன்படி பிள்ளையாரை ஆராதிக்க அல்லது அருள் கிடைக்க எண்ணியிருப்பவர்கள் தங்கள் ராசிக்கேற்ப பிள்ளையாரை வழிபடலாம். அதனால எந்த சிலை வாங்கறதுன்னு முடிவு பண்ணிக்குங்க தாத்தா” என சொல்ல பட்டாபியோ
”இது நல்லாயிருக்கே நாங்க ஏற்கனவே சிலையை ஆர்டர் பண்ணிட்டோம், இப்ப வந்து இதை சொல்றியேம்மா அதுவும் இல்லாம நம்ம வீட்ல ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ராசியில இருப்போம் எப்படி சிலையை வாங்க முடியும்” என கேட்க கௌரியோ
”சரி பரவாயில்லை ஆனா இனிமே அந்தந்த ராசிக்கு ஏத்த மாதிரி பிள்ளையாரை வழிபடலாம்ல” என சொல்ல விசு உடனே
”கௌரி என் ராசி மேஷம், நான் எந்த பிள்ளையாரை கும்பிட்டா பலன் கிடைக்கும்” என கேட்க உடனே சேதுவோ
”என் ராசி மீனம், எனக்கு எந்த பிள்ளையார்ன்னு சொல்லிடு கௌரி” என கேட்க கௌரியோ
”ஒவ்வொன்னா சொல்றேன் கவனமா கேளுங்க
மேஷ ராசிக்காரங்க வீரகணபதியை வழிபடலாம். ரிஷபம் - ஸ்ரீவித்யா கணபதி
மிதுனம் - கண்திருஷ்டி கணபதி கடகம் - ஹேரம்ப கணபதி
சிம்மம் - விஜய கணபதி கன்னி - உச்சிஷ்ட கணபதி
துலாம் - க்ஷிப்ர ப்ரஸாத கணபதி விருச்சிகம் - நர்த்தன கணபதி
தனுசு - சங்கடஹர கணபதி மகரம் - யோக கணபதி
கும்பம் - சித்தி கணபதி மீனம் - பால கணபதி”
கௌரி சொல்லி முடித்தபின் தாத்தாவோ
”நீங்க சொன்ன எல்லாமே சரியானதுதான், இதுல எது பிள்ளையாருக்கு பிடிக்கும் பிடிக்காதுன்னு சொல்றது ரொம்ப கஷ்டம்” என சொல்ல அதைக் கேட்ட மற்றவர்கள் அலுத்துக்கொண்டார்கள். அதில் தாராவோ
”என்ன இப்படி சொல்றீங்க, தீர்வு சொல்றேன்னு கிளம்பி வந்து இப்படி மொக்கை பண்றீங்களே தாத்தா” என சொல்ல அவரோ
”அப்படியில்லை உனக்கான பதில் அந்த பிள்ளையாரே தருவாரு”
“எப்படி” என அவள் கேட்கும் போது செந்தாமரையின் மடியில் படுத்திருந்த சுப்ரஜாவோ தூக்கத்தில் தானாகவே சிரித்தாள். அவளது சிரிப்பைக் கண்ட அனைவரும்
”இதை பாருங்களேன் இவ்ளோ நேரம் அழுதுக்கிட்டிருந்தா இப்ப என்னடான்னா சிரிக்கறா” என செந்தாமரை வியப்பாக