நான் படித்து ரசித்த பொன்மொழிகள் - சந்தியா
1.அன்பு,அறிவு,தூய்மை,நேர்மை,கனிவு ஆகிய நற்பண்புகள் கொண்ட ஒரு மனிதனுக்கு இந்த உலகம் ஓர் இன்பமான வாழ்கையை அமைத்துத் தரும் __இங்கர்சால்
2.துன்பங்கள் நிலையானவை அல்ல. அவை பாலத்தின் அடியில் ஓடும் தண்ணீரைப் போல் ஓடிவிடும் __பர்ஷியன்
3.எல்லாமே அழகு தான். ஆனால் , அதை எல்லோரும் பார்ப்பதில்லை __கன்பூசியஸ்
4.பிறர் உடைமைக்கு ஆசைப்படக் கூடாது _சாணக்கியன்
5.தற்கொலை செய்து கொள்வதிலும் அல்லது
கொலை செய்வதிலும் தைரியம் என்பது இல்லை; வாழ்வதில் தான் தைரியம் இருக்கிறது __குன்றக்குடி அடிகளார்
6.நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது என்பது எளிது; ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பது தான் அரிது. __ கதே
7.வாழ்க்கையில் நமக்குச் சொந்தம் எனச் சொல்லக்கூடிய சொத்து நம் நற்செயல்களே. __கோல்டன்
8.பிறரிடம் குறை கண்டுபிடிப்பது சுலபம். ஆனால் தன் குற்றத்தைத் தானே அறிவதுதான் வெகு சிரமம். __புத்தர்
9.வாழ்வில் எத்தனையோ பாதைகளை அவசரமாய் கடக்கிறோம். அவற்றில் சில பாதைகள் நம் வாழ்க்மைப் பாதையாக இருக்கக் கூடுமென்பதை மறக்கிறோம்.__ மவான்ஸா
10.சொர்க்கம் தாயின் இரு பாதங்களுக்கு அடியில் இருக்கிறது. __ நபிகள் நாயகம்
Hi friends இப்போ யாரும் பொன்மொழிகளை படிக்க விரும்புவதில்லை ஆனால் எனக்கு பொன்மொழிகளை படிக்க மிகவும் பிடிக்கும் இந்த பொன்மொழிகள் உங்களுக்கும் பிடித்து இருந்தாள் உங்கள் கருத்துகளை செல்லுங்கள். உங்கள் கருத்துகளை பொருத்தே இதை தொடர்வதா இல்லையா என முடிவேடுப்பேன்