(Reading time: 3 - 6 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 04 - ஆசை முகம் மறந்திடுமோ – உதயகலா

aasai-mugam-maranthidumo

சுஜிதா தன் இரண்டரை வயது மகன் சந்தோஷுடன் சென்னையில் தனியே வசிக்கிறாள். அவள் காரியதரிசியாக வேலை செய்யும் நிறுவனம் இன்னுமொரு பெரிய நிறுவனத்தால் வாங்க படுகிறது.

அந்த புதிய நிறுவனத்தின் சொந்தக்காரனான அரவிந்தனை சந்திக்கும் போது அதிர்ச்சி அடைகிறாள் சுஜிதா.

அரவிந்தன் தான் சுஜிதாவின் கணவன். அவனை விட்டு தள்ளி இருக்க விரும்பி தான் மதுரையை விட்டு சென்னைக்கு வந்து தனியே இருக்கிறாள் சுஜிதா.

அவளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் அரவிந்தன் அவளை தெரிந்தவனாகவே காட்டிக் கொள்ளவில்லை. புதிதாக அவளை சந்திப்பது போலவே நடந்துக் கொள்கிறான்.

கணவனுடைய இந்த நடத்தையில் மனம் வருந்தப் பட்டாலும், வேறு வழி இல்லாமல் அந்த வேலையிலேயே தொடர்கிறாள் சுஜிதா.

அவளுடைய திறமையும், குணமும் அரவிந்தனை அவளை கவனிக்க வைக்கிறது. அவள் தன் மனைவி என்ற நினைவு இருப்பதாக அவன் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், அவளிடம் கனிவாகவே நடந்துக் கொள்கிறான்.

மெல்ல அதுவே அவன் மனதில் காதலாக மாறுகிறது.

அரவிந்தனின் புதிய அலுவலகத்திற்கு வருகை தரும் அவனுடைய அன்னை மங்களம், சுஜிதாவை அங்கே பார்த்து கோபப்படுகிறார். சுஜிதா மூன்று வருடத்திற்கு முன் செய்துக் கொடுத்திருந்த சத்தியத்தை நினைவு படுத்தி, அவளை உடனே வேலையை ராஜினாமா செய்து செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்.

சுஜிதா அந்த வேலை தனக்கு அவசியம் என்று சொல்லி மறுக்கவும், மங்களமும் அவருடைய சகோதரரும், மீண்டும் சுஜிதாவை அரவிந்தனின் வாழ்வில் இருந்து விரட்ட திட்டம் தீட்டுகிறார்கள்.

 

*************************** Spoiler ahead ***********************************

கதையின் முடிவை படிக்க விரும்பாதவர்கள், இந்த பகுதியை படிக்காதீர்கள்

தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களில் முன் நடந்தவை அரவிந்தனுக்கு தெரிய வருகிறது. அன்னையின் விருப்பம் இல்லாமல் சுஜிதாவை காதல் திருமணம் செய்துக் கொள்கிறான் அரவிந்தன். அந்த திருமணத்தை ஏற்க மறுக்கும் மங்களம், விபத்தில் அடிப்பட்டு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் அரவிந்தனுக்கு உதவ வேண்டுமென்றால் சுஜிதா அவனின் வாழ்க்கையை விட்டு விலகி சென்று விட வேண்டும் என்ற நிபந்தனையை வைக்கிறாள். வேறு வழி இல்லாமல் அரவிந்தனுக்காக அவனை பிரிந்து செல்கிறாள் சுஜிதா. அவள் சென்ற பின், அரவிந்தனுக்கு குணமானாலும், அவனின் வாழ்வில் சமீபத்தில் நடந்தவற்றை மறந்து போயிருக்கிறான். இதனால சுஜிதா, அவர்களின் காதல், திருமணம் எதுவுமே அவனுக்கு நினைவில்லாமல் போகிறது. உண்மை தெரிந்து விடவும், சுஜிதாவை தேடி செல்கிறான் அரவிந்தன். பிரிந்தவர்கள் ஒன்று சேர்கிறார்கள். சிறிது நாட்களில் தன் மகன் குடும்பத்தை தேடி வருகிறாள் மங்களம். பிரிந்த குடும்பம் ஒன்றாகிறது, அதன் பின் எல்லாம் சுபம்!*************************** End of Spoiler *********************************** 

ல்ல ஜனரஞ்சகமான குடும்பக் கதை.

 

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.