(Reading time: 3 - 6 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 07 - தாழம்பூவும் தங்கநிலாவும் – காஞ்சனா ஜெயதிலகர் 

பகிர்ந்தவர் - பிந்து வினோத்

thaazhampoovum-thanga-nilaavum

பிரென்ட்ஸ், நான் ஷேர் செய்திருக்கும் இந்த கதையை படித்து ஒன்றிரண்டு வருடங்கள் (அதற்கு மேலேயும் இருக்கலாம்) ஆகி விட்டது என நினைக்கிறேன்.

என் மெமரியில் இருந்து retrieve செய்து தான இங்கே share செய்கிறேன்.

கதை சுருக்கத்தில் ஏதாவது தவறு இருந்தால் தாராளமாக சுட்டிக் காட்டுங்கள்.

 

ருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் பெரிய எஸ்டேட் ஒன்றின் நடுவே இருக்கும் பங்களாவில் தாத்தா மற்றும் வேலைக்காரர்களுடன் தனியே வசிக்கிறாள் கனகாங்கி.

அவளுடைய தாத்தாவிற்கு புற்றுநோய் இருப்பது தெரிய வரவும் பேத்திக்கு உறவினர் ஒருவரின் மகன் மகேஷை திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்.

அந்த மகனும், அவனின் அம்மாவும் நல்லவர்கள் இல்லை என்று புரிந்துக் கொள்ளும் கனகாங்கி, அவர்கள் பங்களாவின் அருகே இருக்கும் இன்னொரு பங்களாவிற்கு வருகை தரும் பிரபல புகைப்பட நிபுணரான அசோக்கை சந்தித்து உதவி கேட்கிறாள்.

அசோக் அவளை திருமணம் செய்ய விரும்புவதாக சொன்னால் தாத்தா மனதை மாற்றிக் கொள்வார் என்று சொல்கிறாள்.

கனகாங்கியை பார்த்த உடனே காதல் கொள்ளும் அசோக் அவளுக்கு உதவுவதாக வாக்கு கொடுக்கிறான்.

சொன்னது போலவே, தாத்தாவை சந்திக்கவும் செய்கிறான். கனகாங்கி கேட்டுக் கொண்டதை போல அவரிடம் அவன் திருமணம் பற்றி பேசவில்லை என்றாலும், அசோக்கின் வருகையும், அதனால் கனகாங்கியிடம் ஏற்பட்டிருக்கும் மாறுதலும் பெரியவரை யோசிக்க வைக்கின்றது.

பெரியவர் முன்பு போல ஆர்வத்துடன் திருமணம் பற்றி பேசவில்லை என்ற உடன் மகேஷ், அவன் தம்பி மற்றும் அம்மா விழித்துக் கொள்கிறார்கள்.

அசோக்கை கனகாங்கி பார்வை வட்டத்தில் இருந்து விலக்கவும், குறுக்கு வழியில் கனகாங்கியை திருமணம் செய்துக் கொள்ளவும் முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் அவர்களின் திட்டங்கள் தவிடு பொடியாகி கனகாங்கியுடன் இணைகிறான் அசோக்.

 

ந்த கதை சுருக்கம் படிக்கும் போது இது சாதாரண கதை என்ற ஒரு feel கொடுக்கலாம்.

ஆனால் இந்த கதையின் முக்கிய highlight காஞ்சனா மேமின் கதை செட்டிங். அந்த பங்களா அமைந்திருக்கும் இடம், காடு, கனகாங்கி பற்றிய வர்ணனை. தாழம்பூ மணம் மற்றும் (தங்க) நிலா பற்றிய அவர்களின் குறிப்பு என அந்த கதைக்கான சுழலை நம் கண் முன் கொண்டு வருவதில் தான் அவர்கள் தன் கிளாஸை காட்டி இருக்கிறார்கள்.

படித்து ஆண்டுகள் ஆன பிறகும் இப்போதும் என் நினைவில் இருக்கும் ஒரு இனிமையான காதல் கதை இது.

 

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.