(Reading time: 1 minute)

நீயும் நானும் - 02 - மௌனமாய்

There is always a Lot of WORDS Behind THE SILENCE...!

 

நான்:    

கரை கடந்த இன்பத்திலும்

துன்பத்தின் உச்சத்திலும்

மௌனமே பேசுகிறது மனிதனிடம்..!

 

நீ :      

மௌனம் பேசுவதை

காவியமாய் வடி(க்)கிறதோ

கண்ணீர்

 

நான்:    

மௌனத்தின் அடங்காத தாண்டவமே

கண்ணீரின் வெளிப்பாடு...

 

நீ :      

இதயத்தை உரைத்திட ஒரே வழி

இரு விழிகள் பேசிடும் மொழி

மௌனம்

 

நான்:    

மௌனம் வார்த்தைகளின் உச்சம் ...

 

நீ :      

வார்த்தைகளுக்கு ஏற்பட்டதோ அச்சம்  

மெளனத்திடம் சென்றடைந்ததோ தஞ்சம்

 

நான்:    

வார்த்தைகள் வற்றாத புத்தகம்

மௌனம் ..

Neeyum naanum - 01

Neeyum naanum - 03

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.