நீயும் நானும் - 02 - மௌனமாய்
There is always a Lot of WORDS Behind THE SILENCE...!
நான்:
கரை கடந்த இன்பத்திலும்
துன்பத்தின் உச்சத்திலும்
மௌனமே பேசுகிறது மனிதனிடம்..!
நீ :
மௌனம் பேசுவதை
காவியமாய் வடி(க்)கிறதோ
கண்ணீர்
நான்:
மௌனத்தின் அடங்காத தாண்டவமே
கண்ணீரின் வெளிப்பாடு...
நீ :
இதயத்தை உரைத்திட ஒரே வழி
இரு விழிகள் பேசிடும் மொழி
மௌனம்
நான்:
மௌனம் வார்த்தைகளின் உச்சம் ...
நீ :
வார்த்தைகளுக்கு ஏற்பட்டதோ அச்சம்
மெளனத்திடம் சென்றடைந்ததோ தஞ்சம்
நான்:
வார்த்தைகள் வற்றாத புத்தகம்
மௌனம் ..