நானும்......!
ஆற்றோரம் ஒதுங்கிக் கிடக்கும் இறந்த மீனைப்
பார்த்தும் பாராதது போல் .....
கைகோர்த்து நடக்கும் போதும்.....
செடியிலிருந்து உதிர்ந்து கிடக்கும்
கவிழ் பூக்களின் மேல் பாதம்
பதிக்க நேரும் போதும்....
மரத்தினடியில் கசக்கிப் போட்ட காகிதம்
ஒரு மரம் தன் வரலாறைக்
கூறும் போதும்
கிறீச்சிடும் கதவு போடும்
கூப்பாட்டைக் கேட்டும் கேட்காமலும்
எட்டி உதைத்து மூடும் போதும்....
கண்ணாடிக் குடுவைக்குள்
முட்டி மோதும் மீனின்
குட்டி வாய்க்குத் தேவை
உணவெனத் தூவும் போதும்....
இருட்டுக்கு ஒளியேற்றும்
மெழுகுவர்த்தியின் சோகம் அறியாமல்
விரல் நீட்டி விளையாடும் போதும்....
நீங்களும் என்றேனும் எங்கேனும்
ஒரு சோகப் பாடலை மனதுள்
ஒரு நாள் பாடியிருக்கலாம்....
நானும்......