காயம் ஆறுமா?
மன்னித்து கடவுள் ஆகிவிடு மறந்து மனிதன் ஆகிவிடு
இதை தானே சொன்னார்கள் மனித நேயம் என்று?
மன்னித்தால் காயம் ஆறுமா
இல்லை மறந்தால் தான் தவறுகள் குறையுமா
இதற்கு தானே வேண்டும் விளக்கம் இங்கு?
சிறு கைகளை பிடித்து நடக்கும் அந்த தந்தை சிரிப்பின் ரகசியம்
அவள் கட்டி பிடித்து உறங்கும் பொழுது அந்த தாய் மனதின் சந்தொஷம்
இது கடவுள் தந்த வரம் என்று நினைக்க வைக்கும் அவள் விளையாட்டு
இவை அனைத்தையும் நினைக்கும் தருணம்
கண்ணில் நீர் வர கூடும்
அவள் கல்லறைக்கும் போனது
பாதுகாப்பு இல்லா காரணம் என்று தெரிந்ததும்.