நீ என்னை சேரும் வரை...
உன் நினைவில் விடியும் என் கனவில் வந்த, பெண்ணின் சாயல் நீயோ?
உன் பக்கம் வந்தேன் இருண்டு போனாய், என் தேடலின் விதைகள் நீயோ?
காத்திருப்பேன் காற்றினுள்ளே, உன் ஸ்வாசத்தில் கலந்து உன்னை சேர
காத்து வைப்பேன் உன் நினைவை ஊட்டும் என் கனவுகளை,
நீ என்னை சேரும் வரை...