என்னவென்று சொல்வது...!!!
ஏய் என்று -என்
பெயரை நீ உச்சரிக்கும்
நேரத்தில்....
சமயத்தில் தனிமையில்....
சமயத்தில் கூட்டத்தில்....
உன்னை நேர் நிமிர்ந்து-பார்க்கையில்....
எதிர் கேள்வி நீ
கேட்டு- நான் பேச
முடியாமல் தவிக்கையில்...
கண்கள் நேர்க்கோட்டில்
சந்திக்கையில்...
என் மனதை என்னவென்று
சொல்வது...!!!