(Reading time: 1 minute)

 

நான்!!

 

தேவையே தெரியாது தேவையின்றி 

ஓடும் முயல்களின் கூட்டத்தில் 

ஆமை நான்!!

 

மழைக்கு குடைபிடித்து நடக்கும் 

கோடானக்கோடி இதயங்களுக்கு 

எதிராளி நான்!!

 

சாளரம் திறந்து காற்றுக்கு 

வரவேற்ப்பு பத்திரம் -வாசிக்கும் 

ரசனைவாதி நான்!!

 

வார்த்தைகளால் விளையாடும் 

கவிஞன் மட்டுமல்ல- நான்!!

சரியும் தவறும் 

தாகமும் ரசனையும் 

ஆசையும் கண்ணீரும் 

ஆத்திரமும் அழுகையும் 

முரண்பாடுகளில் வாழும் 

அற்ப மானுடமும்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.