(Reading time: 1 minute)

பொங்கல்...  - ஸ்வேதா சந்திரசேகரன்

பெயற்ற ஒருவனுக்காக

வாழ்த்து இது...

புகழ் பாடி பயனில்லை -அவன்

அருமை தெரியும் எல்லாருக்கும்...

மூன்று வேளை தலை -குனிந்து

கையிலெடுத்து உணவருந்தும் போது...

பனியின் பணி முடிந்து -கதிரவன்

திரும்புகையில் மகிழ்வான் அவன்...

அறுவடை ஆரம்பித்து முடித்து

அரைப்பைசா குறையுதே...

குறைகளோடே அவன் உளை

கஞ்சியை மட்டுமே காய்ச்சும்..

உற்பத்தி மட்டும் தான் அவனிற்கு

உரிமையில்லை அவன் வயிற்றுக்கு...

வானும் மண்ணும் தான்

அவனுக்கு சொந்தம்...

இனிய விடியலுக்கு –வாழ்த்திடுவோம்

அவன் நன்மைக்கு பொங்கலோ!! பொங்கல்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.