என்னவள்
காற்றே
நீ என்னவளின் மீது
தழுவிச் செல்வதால்
தென்றலானாய்
தீயே
நீ என்னவளின் கைவிரல்
பட்டு உரசியதால்
தீபமானாய்
நீரே
நீ என்னவளின் பாதங்களை
நனைத்துச் செல்வதால்
தீர்த்தமானாய்
நிலமே
நீ என்னவளை தாங்கிக்
கொண்டு இருப்பதால்
வளங்கொழிக்கும் நிலமானாய்
வானமே
நீ என்னவளின் பார்வை
பட்டு செல்வதால்
அழகாய் இருக்கிறாய்