காற்று- என் எதிரி
ஏய்! காற்றே
எவ்வளவு தைரியம் ?
எப்பொழுதும் என்னவனை
உரசிக் கொண்டே இருக்கிறாய்
அதனால் காற்றே
பொறாமைப் படுகிறேன்
உன் மீது
நான் செய்ய வேண்டியதை
நீ செய்வதால்.....
உன்னை நான்
வெறுக்க முடியாது
அதனால் தான்
பொறாமைப் படுகிறேன்
ஏனென்றால் ?
என்னை நீ
வெறுத்து விட்டால்
நான் என்னவனுடன்
இருக்க முடியாதல்லவா!