(Reading time: 1 minute)

 

கோவில்

 

கடவுளுக்கு நெயபிஷேகம் பாலபிஷேகம்
சலித்து விட்டதோ?
அதனால் தான் மனிதனே நீ
இரத்தபிஷேகம் செய்கின்றாயோ!
அன்று விஸ்வாமித்ரர் தன் உடலை
எரித்து தன் பக்தியை காட்டினார்
இன்று பல மனித உயிர்களை
எரித்து உன் பக்தியை காட்டுகிறாயோ!
கடவுளுக்கு எம்மதமும் சம்மதம்
எம்மொழியும் அவர் மொழி
எல்லா விடத்தும் கடவுள் நிறைந்துள்ளார்
அதனால் எவ்விடமும் அவரிடம்
ஆனால் இதையெல்லாம் புரிந்து கொண்டும்
ஏன் நீ ஏற்க மறுக்கிறாய்?
நெஞ்சம் எனும் உயர்ந்த கோவிலை
வைத்து கொண்டு மனிதனே!
ஏன் நீ கோவிலை கட்டுவதற்காக
இடத்தை தேடி அலைந்துக் கொண்டிருக்கிறாய்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.