காத்திருக்கிறேன்
உன்னை பார்த்ததால்
இன்பமழையாக என்னை
நனைத்தவளே!
உன் பார்வையால்
மலையருவியாக என்னை
குளிரவைத்தவளே!
உன்னை கடந்து செல்கையில்
நீரோடையாக என்னை
இதமூட்டியவளே!
என் எண்ணத்தால்
நதியாக வெள்ளமெடுத்து
ஓடியவளே!
என் நேசக்கடலில்
நீ சங்கமிக்கும் வரை
காத்திருக்கிறேன்........