அனைத்தும் நீ - சரண்யா
காரணம் புரியவில்லை
காதலும் இல்லை
மனதில் உற்சாகம்
உதட்டில் உறையும் புன்னகை
இதமாக இதயம் வருடும்
இனிமையான நினைவுகள்!!!
இருள் விலக்கும் சூரியனைப் போல்
பிரகாசமாக இருக்கிறது
கதை போல் முடிந்துவிட்ட கவலைகள்
சில நேரங்களில் தோன்றுகிறது
அனனத்தும் கற்பனையோ என்று!!!
கனவும் இல்லை கற்பனையும் இல்லை
என் மனதை மயக்கும் சந்தோஷ தருணங்கள்
நல்ல வேளை நான் உன்னை சந்தித்தேன்
அனைத்தும் நீயானாய் எனக்கு!!!