கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 53 - என்ன செய்யப் போகிறாய்….!!!! - மீரா ராம்
மாலை நேரம்…
கதிரவன் மலையினுள் ஒளிந்துகொண்டு
விளையாட்டுக் காட்டுக்கொண்டிருந்தான்
தன்னவளான வான மங்கைக்கு…
மனதின் ஒரம்…
என் ஆதவன் நீயும் ஒதுங்கி கொண்டு
விளையாடிக்கொண்டிருக்கிறாய்
என்னவனாய் இம்மங்கைக்கு…
உன்னை நினைத்த மாத்திரமே
அளவில்லா சந்தோஷம் கொள்ளும் நான்
மறுகணமே விரக்தியை பரிசாய் பெறுகிறேன்…
ஏனோ தெரியவில்லை அதன் காரணம் மட்டும் இன்றுவரை…
இதயமானது உன் உதயத்தில் சிக்கிக்கொள்ள
கனமானது மனமானதை ஆட்டிப்படைத்திடுகிறது
சற்றும் கலங்கிடாமல்…
விந்தையோ விரக்தியோ?...
இன்னதென்று இனம் பிரித்திட தெரிந்திடவில்லை எனக்கு…
காலம் முழுவதும் உன்னை நான் தூரத்திலிருந்தபடி
ரசித்துக்கொண்டு தான் இருப்பேனா?...
என் பார்வையும், உன் கருத்தை எட்டாதா?...
வழக்கம் போல் கேள்வியே மனதினை உலுக்கிட
நிலைக்கதவில் சாய்ந்தபடி பற்களால் கழுத்திலிருந்த
செயினைக் கடித்து என் இயலாமையினையும்
விரக்தியினையும் வெளிப்படுத்திட,
உன்னைப் பார்க்கவே கூடாது இனி என்ற வைராக்கியமும்
என்னுள் உதித்து ஒரு விநாடி கூட ஆகிடவில்லை…
அது சின்னாபின்னமாகி கலைந்து காற்றோடு தூசியாய் மாயமாய் போனது
என்னைக் கடந்து நீ காரில் பயணித்தபடி செல்வதை அருகில் கண்டதும்…
ஆரஞ்சும் இல்லாது, காவியும் அல்லாத, இரண்டுக்கும் இடைப்பட்ட நிறத்தில் உடை…
அலங்காரம் செய்து கொள்ளாத உன் ஒப்பனை…
காற்றில் கலைந்து போயிருந்த உன் கேசம்…
முகத்தில் பூத்திருந்த தாடிப்பூக்கள்…
அதற்கும் மேல் நான் ரசித்திடும் மீசை மொட்டு…
ஓரிரு விநாடி எடுத்திருக்குமா? நீ என்னைக் கடக்கையில்??...
உன்னை சிலையென என்னுள் வடித்தே விட்டேன் அந்த சிறு இடைவெளியிலும்…
சொன்னாலும் உன்னால் நம்ப முடியுமா?...
வார்த்தைகளினால் நான் வர்ணித்தது சொற்பமே…
சிற்பமே நான் செதுக்கிட்டாலும் அதிலும் நான் திருப்தி கொள்ளமாட்டேனடா…
என்னருகில் நீ…. உன்னருகில் நான்…
என்னோடு நீயும்… உன்னோடு நானும்
இருந்திடும் ஓர் வரமும் எனக்கு வேண்டுமடா…
என்னை சூளும் விரக்திக்கு முக்தி அளித்து
என்னை மீட்டிடுவாயா?...
நான் வீணை ஆவதும், வீணே ஆவதும்
இனி உன் வசமே…
சொல்லடா?.. என்ன செய்யப்போகிறாய்?...
பூ மலரும்…
{kunena_discuss:1088}