கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 55 - என்னை வந்து சேர்வாயா….!!!! - மீரா ராம்
வண்ணங்கள் விதவிதமாய் கொண்டு
வானில் பல பூக்கள் மலர்ந்து விரிந்திட
எண்ணங்களில் வந்து விரிந்திட்டாய் நீ…
நெஞ்சம் முழுதும் நினைவுகள் நிறைந்திருக்க
கண்கள் முழுதும் கனவுகளில் சஞ்சரித்திட
இதயத்தில் உன் உதயம் உதயமானது இனிதே…
புது வருடமாம்… புத்தம் புது வருடம்… பிறந்திட
ஊரே கோலாகலமும் கொண்டாட்டமுமாய் இருக்க
நான் கொண்ட நேசம் மட்டும் தனித்திருந்தது…
ஆம்…
இவள் கொண்ட மையல்…
இதழ் கூறிடாத சொற்கள்…
மனம் கொண்ட மங்கை…
மணம் புரியாத மன்னவன்…
ஹ்ம்ம்… காதல்….
மனமெங்கும் பொங்கி வழிந்திடும் அருவியென
இதயமெங்கும் படபடத்து ஓடிடும் ஆறென
உள்ளமெங்கும் குதூகலித்து சென்றிடும் கடலென
என்னுள் நீ நீக்கமற நிறைந்திருக்கிறாயடா…
என்றும் உன்னை நீங்காமல் இருக்கவே எண்ணுகிறேன்
என் எண்ணம் ஈடேறுமாடா கண்ணா?...
கைபேசியில் பதிந்து வைத்திருந்த உன் புகைப்பட்த்தை
எடுத்து வருடிப்பார்த்துக் கொண்டேன்…
மயிலிறகால் மனதை வருடியது போல் இருந்தது அத்தருணம்…
எவ்வகை காதலடா இது?...
ஓர் வார்த்தை பேசியதில்லை…
ஓர் பார்வை பார்த்ததில்லை…
ஓர் புன்னகை புரிந்ததில்லை…
இதில் எதுவுமே நீ செய்ததுமில்லை…
இருந்தும் என்னுள் நீ எப்படியடா நுழைந்தாய்?..
போடா… கோபம் கொண்டு சிணுங்கினாலும்
மறுகணமே மனமானது உன்னை
இதய சிம்மாசனத்தில்
அமர வைத்து அழகு பார்த்திட
உள்ளமெனும் ஊஞ்சலோ எழிலுற ஆடி
என்னை கிறங்கவைத்திடுகிறதடா கண்ணா…
ஏங்குகிறேனடா உன் ஒற்றைப் பார்வைக்கு…
தவம் ஒன்று தான் செய்யவில்லை..
அதனையும் நான் செய்திட்டால் தான்
உன் பார்வை என் மீது பட்டிடுமா?..
ஆசை ஆசையாய் இருக்கிறதடா
ஒருமுறையேனும் என்னைப் பார்த்திடேண்டா…
காதலுடனும் கனவுடனும்
உலாவரும் என் மையலுக்கு
உயிர் கொடுத்து இவ்வருடமேனும்
என்னை வந்து சேர்ந்திடுவாயா?... கண்ணா…
ஹாய் ப்ரண்ட்ஸ்…
நான் எழுதிட்ட இவ்வருடத்தின் முதல் கவிதை இது…
எப்படி இருக்கிறது என்று படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்..
மீண்டும் அடுத்தவாரக் கவிதையில் சந்திக்கலாம்…
நன்றி…
பூ மலரும்…
{kunena_discuss:1088}