(Reading time: 2 - 3 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 66 - ஏற்றுக்கொள்வாயா என்னவனே….!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

சிந்தை முழுவதும் உன் எண்ணக்கோலங்கள் நிறைந்திருக்க

நெஞ்சம் முழுவதும் உன் காதல் பெருகிற்றடா காதலா…

முகம் பார்க்க தவித்த நாட்கள் எத்தனை…

காலடி ஓசை கேட்க தவித்த தருணங்கள் தான் எத்தனை…

விரல் விட்டு சொல்லிவிடமுடியுமா?... அல்லது

வார்த்தைகளால் நிரப்பிடத்தான் முடியுமா?...

உன் மீதான என் காதல் நீல வானம் போல்…

பரந்து விரிந்து கிடக்கிறது எல்லையே இல்லாது…

அதில் மேகங்கள் போல் நீ ஆடிடும் கண்ணாமூச்சியும்

அவ்வப்போது மிதந்து விளையாட்டு காட்டிற்றே எனக்கும்…

அப்பப்பா…

இடி போல் வந்து சென்ற பாராமுகம்

கனக்க வைத்திட்டதே என் இதயத்தையும்…

செய்வதறியாது நான் திகைத்து நிற்கையில்,

மின்னலாய் உன் காதல் என் கண்களுக்கும் விருந்தளிக்க

மழையாய் பொழிந்து என் நெஞ்சை குளிரவைத்துவிட்டாயே கள்வா…

ஈரநிலமாய் நான் நடுங்கிக்கொண்டிருக்க,

மென் காற்றாய் எனை வருடிச்சென்றாய் நீ…

இயற்கையாய் வந்து எனை பேதலித்தவனே…

அதே இயற்கையாய் எனை சேர்ந்திடவும் செய்தாயே…

என்ன செய்திட முடியும் நான் ?...

உன் அன்பிற்கு ஈடாக?...

காலம் முழுவதும் உனை காதலிக்க வேண்டும்…

மாறாத வாஞ்சையோடு…

மறவாத நெஞ்சோடு…

ஆம்… இதே காதலோடும்…

ஏற்றுக்கொள்வாயா?.. என்னவனே!!!!...

பூ மலரும்

Ilam poovai nenjil 65

Ilam poovai nenjil 67

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.