(Reading time: 2 - 4 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 70. காற்றானவனுமாடா...!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

கண்ணுக்குள்ளே காணும் கனவுகள்

நெஞ்சுக்குள்ளே நிலவும் நனவுகள்

யாவுமே உன்னிலே தஞ்சம்…

வீடுவரை நீ விட்டுச்சென்றிட்ட போதும்

ஒருவித ஏக்கம் எனக்குள்

பொங்கி எழுகிறது அலையென…

பத்து நிமிடமோ, சில நொடிகளோ

உன்னுடன் இருந்திட்டேனே…

எனினும் ஏன் இந்த தவிப்பு என்னுள்?...

தாயைப் பிரிந்திட்ட சேயாய்

நானிங்கு துடிப்பதும் ஏன்?...

வாசலையே எட்டி எட்டிப் பார்த்து

மலங்க மலங்க விழிப்பதும் ஏன்?...

சாப்பாட்டில் கை அளைந்து கொண்டிருந்ததே தவிர,

உள்ளுக்குள் இறங்கிடவில்லை…

பசி தான் தொலைத்திட்டேன் என்றால்

உறக்கமும் கையைவிட்டு போயிற்றே இன்று…

ஏனடா?...

உன் நினைவு ஒன்றே போதுமா எனக்கு?...

வேறெதுவும் தேவையில்லையாடா எனக்கு?...

சொல்லுடா…

நான் உயிர் வாழ்ந்திட உன் சுவாசக்காற்றும்

உன் எண்ண ஓட்டங்களும் மட்டும் போதுமெனில்

உன் நினைவுக்கு மனதில் பஞ்சம் தான் ஏது?...

உன் நியாபகப்பிடியில் நானும் அகப்பட்டிருக்க

என் கைபேசி சிணுங்கியது வேகமாய்…

யார் இந்த நேரத்தில்…

யோசனையுடன் எடுத்தவளின் பார்வைக்கு

திரையில் மின்னிய எண்கள் தயக்கத்தை கொடுக்க

புதிதாக இருக்கிறதே… வாய்விட்டு சொல்லியபடி

அழைப்பை ஏற்று காதினில் வைத்திட

எவ்வித சப்தமும் இல்லை எதிரே…

“யாரு…?” நானும் சற்றே பயத்துடன் கேட்டிட

மறுமுனையிலோ லேசான சிரிப்ப சத்தம்…

“யாருங்க… கேட்குறேன்ல?...”

சற்றே மூண்டிட்ட எரிச்சலுடன் நானிருக்க

“ஹ்ம்ம்…..” என்ற சுவாசக்காற்றில்

என் செவியோரம் உணர்ந்திட்டேன் உன் அருகாமையை…

ஹ்ம்ம்… உன் சுவாசக்காற்றை என்னுள் பரப்பி

நான் உயிர் வாழ வழி செய்கிறாயாடா?...

என் செல்லக்கண்ணா…

நீ என் பிரியமானவன் மட்டுமில்லையா?...

என் சுவாசத்தில் கலந்திருக்கும் உயிர்க் காற்றானவனுமாடா!!!....

பூ மலரும்

Ilam poovai nenjil 69

Ilam poovai nenjil 71

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.