(Reading time: 2 - 4 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

என்னவனே….

உன் மேல் நான் கொண்ட காதல்…

கடலின் ஆழம் போல…

பரந்து விரிந்த வானம் போல…

எல்லை எதுவும் இல்லாமல்

தங்கு தடையின்றி நீள

நானோ மொத்தமாய் உன் வசமாகிப்போகிறேன் ஏனோ…

எண்ணங்கள் எத்தனை என்று நான் அறியாத போதிலும்

அதில் உறைந்து நிற்பவன் நீ என ஆகிறாய்…

வண்ணங்கள் இத்தனை என மனம் சொல்லிய போதும்

அதில் நானும் காண்பதும் நீ என மாறுகிறாய்…

காதல்…

அது படுத்தும் பாடு தான் எத்தனை!!!

கணக்கிலடங்க மறுப்பது போல்

பிடிவாதம் அது கொள்வதற்கும் தான் வரையறை ஏது!!!

நெஞ்சத்தில் மன்னவனும்…

உள்ளத்தில் காதலும்

நீக்கமற நிறைந்திருக்க

பெண் அவள் கொள்ளும் இன்ப வேதனை தான் என்னென்ன!!!!

மனதின் ஊஞ்சலில் அவனின் நினைவுகள்

மணம் வீசும் மாலையாய் தவழ்ந்திட

இதயமெனும் சோலையும் அதன் வசியத்தில்

மயங்கி கிறங்கி தான் போகிறது ஏனோ!!!...

எப்படி இது நடந்தேறுகிறது?...

இதன் காரண கர்த்தா தான் யார்?...

உன்னை நினைக்கும் நானா?...

அல்லது என்னை நினைக்க வைத்த நீயா?...

இல்லை இருவரையும் ஒருசேர

இப்பூமியில் படைத்திட்ட இறைவனா?...

யாரை நான் என் காதலுக்கு காரணமாக்க!!!...

காரணம் இன்னெதென்ற போதிலும்

என் காதலன் நீயென ஆனாயே கண்ணா…

அதுவே போதுமென மனமும் உவகை கொள்வதும் எதனால்!!!

விந்தையிலும் விந்தையாய் நானே என் மனதை வியக்க

அது சொல்லும் செய்தி மட்டும் விந்தைக்கு அப்பால்….

ஆம்… உன்னை கண நேரம் கூட நினைக்க மறுக்கவில்லையே…

உன்னை சில நிமிட இடைவெளியில் கூட மறக்க நினைக்கவில்லையே…

எண்ணமும் செயலும் யாவும் நீயென ஆகும் மர்மமும்

இப்பேதைக்கு இன்னமும் விளங்கிடா புதிர் தான்…

ஹ்ம்ம்ம்… வஞ்சி இவளுக்கும் காதல் வந்திட

நெஞ்சமும் கொஞ்சமும்

மஞ்சத்தில் துயில் கொள்ளவில்லை

உன் காதல் வரவில்!!!!

பூ மலரும்

Ilam poovai nenjil 70

Ilam poovai nenjil 72

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.