கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...!!!! - மீரா ராம்
இருள் எங்கும் பரவி இருக்கும் இரவு வேளை
சந்திரன் மட்டும் பொலிவோடு வானில் உதயமானான் அழகாய்…
ஏனோ அம்முழுமதியானை பார்க்கும் பொழுதெல்லாம்
மனதில் ஓர் அமைதி நிலவுகிறது காரணமே இல்லாது…
வட்ட முகம்…
வெண்மை நிறம்…
ஒளிவீசும் அழகு…
கண்ணைக் கவரும் தோற்றம்…
பாதி நாள் வளர்ந்தும் மீதி நாள் தேய்ந்தும்
வளரும் பிள்ளை நிலா…
ஹ்ம்ம்… நான் அந்த ஆகாய நிலவனை ரசிக்கிறேனா?...
இல்லை?.. என் மனதின் நிலவன் உன்னை ரசிக்கிறேனாடா?...
அழகு கள்வா…
வட்ட முகமும், வெண்மை நிறமும்,
ஒளிவீசும் அழகும், கண்ணைக் கவரும் தோற்றமும்,
பாதி நாள் கண்ணின் முன்னே வந்தும்
மீதி நாள் கண்ணில் படாது மறைந்தும்
என்னுடன் விளையாடும் மழலை அல்லவா நீ….
நிலவன் அவன் உருவத்தில் உன்னை நான் காண்கிறேன் என
சொன்னால் நம்புவாயாடா?...
எனினும் அதுதானே உண்மையும் கூட….
நிலவனைக் கண்டதும் கண்கள் கொள்ளும் குளிர்ச்சி,
என்னவனைக் காணும் போதும் அப்படியே எனக்கு கிடைக்கிறதே…
அவன் அழகு முகம் தரிசித்ததும் உள்ளமெங்கும் எழும் ஓர் உவகை,
உன் முகம் பார்க்கும் தருவாயில் இரட்டிப்பாகிறதே….
பூமியெங்கும் இருளை நீக்கி ஒளி கொடுக்கிறான் சந்திரன்…
என் மன இருளை நீக்கி என்னில்
பொலிவு கொடுப்பது என்னவன் நீயல்லவா…
அதை இல்லையென்று நான் மறுத்திட முடியுமா?...
ஆயிரம் சந்திரனும், என்னவன் நீ ஒருவனுக்கு நிகரில்லை
என்றுதானே மங்கை இவளும் எண்ணுகிறாள்…
நிலவன் அவன் உருவில் உன்னை நான் காண்பதும்
இன்று நேற்று நடப்பதல்லவே…
உன்னை எந்நொடி பார்த்தேனோ…
உன்னை எப்பொழுதிலிருந்து தேட துவங்கினேனோ
அந்த நொடியே நிலவனாக நான் உனைக் கண்டேன்…
எனக்குள் இருக்கும் ஏக்கம், தவிப்பு அனைத்தும்
உயரத்தில் இருக்கும் நிலவனிடம் நான் கொட்டியிருக்க,
என்னருகில் நீ இருந்த போதும்,
உன்னிடம் பேச நா வரவில்லை எனக்கு…
இதழ்கள் இறுக கட்டுண்டிருக்க,
வார்த்தையோ ஓடி ஒளிந்து கொண்டது ஏனோ…
பெண்மையின் அடையாளமாம் நாணம் எனக்குள் குடிபுக
நானும் சராசரி பெண்ணாய் காதலன் அருகிலிருந்தும்
பேச முடியா ஊமையாகி போனேன் முழுவதும்…
ஹ்ம்ம்… ஆம்…
நிலவனாக நீ இருக்க
நிழலென உனை பின் தொடர்கிறேன் நானும்
உன் காதல் இரவில்…
பூ மலரும்…
{kunena_discuss:1088}