(Reading time: 2 - 3 minutes)

அவளின் டைரியில்… - மீரா ராம்

06. இறைவா நல்வழி காட்டு எனக்கு

வெகுநாள் கழித்து விழிகளில் நீர் கசிந்தது மிக…

சில சமயம் சினிவாவும் வாழ்க்கையும் ஒன்று தானோ???

இத்திரைப்படம் பட தடவை இதற்கு முன் பார்த்தபோது

ஏற்படாத பாதிப்பு இன்று எனக்குள் நிகழ்ந்தது…

நீ வேறு நான் வேறென்று பிரிந்த பின் இன்று தான்

அத்திரைப்படத்தை பார்க்க அணுகூலம் கிட்டியது…

அப்பெண்ணின் நிலையில் தானே நானும் உள்ளேன்…

பிடிச்சிருக்கா… பிடிக்கவில்லையா?... தெரியவில்லை…

வாயைத் திறந்தால் முத்தும் உதிர்ந்திடுமா அன்பே…

இறுதியில் சுபமாக முடியும் அத்திரைப்படத்தின் காட்சி…

உன்னையே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும்

என் நிலையின் அடுத்த காட்சி என்ன???

சொல்… என்னவனே…

மனம் திறந்து ஓர் வார்த்தை உதிர்த்தால்

உயிர்ப்பிழைக்குமே என் ஜீவன்…

அது சாதகமானாலும் பாதகமானாலும் சம்மதமே…

கன்னங்களில் திரண்டு ஓடும் கண்ணீரை மட்டுமே

தட்டிவிட முடிந்தது என்னால்…

அழுத நான் சிரித்ததும் உண்மை தான் இன்று…

ராசியும் பொருந்தவில்லை…

நட்சத்திரமும் பொருந்தவில்லை…

இந்த சம்மந்தம் வேண்டாம் என வந்தது செய்தி…

ஆகாயத்தில் பறந்தேன்…

மகிழ்ச்சியில் திளைத்தேன்…

நான் உன்னை சேரத்தான் இது தட்டிப்போனதோ??!!!

இறைவா நல்வழி காட்டு எனக்கு…

Avalin diary'l - 05

Avalin diary'l - 07

{kunena_discuss:784}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.