அவளின் டைரியில் - மீரா ராம்
24. கோடி முறை இறக்கவும் தயார்…
எதற்கடா என்னை இப்படி சாகடிக்கிறாய்?...
வேறொரு வாழ்வை ஏத்துக்கவும் முடியாமல்
உன்னை மறக்கவும் இயலாமல்…. அய்யோ…
வலிக்கிறதே… கடவுளே… ஏன் இப்படி நடக்கிறது???..
உன்னில் நான் இல்லை… என்னில் நீ மட்டுமே…
கனவிலும் உன்னுடன் நான் வாழ்ந்து கொண்டிருக்கும்
அவலம் எனக்கு ஏன் நேர்ந்தது???..
மருகுகிறேன், உயிர் சிதிலமடைந்து போனாலும்
உன் நியாபகங்கள் சிதறாமல் இதயத்தில் இருக்கின்றனவே…
தனிமைத் தீயில் கருகிப் போகின்றேன்
உன் காதலின் வெப்பம் தாங்காமல்…
வேண்டுமென்று உன்னை எனக்குள் சுமக்கவில்லை…
என்னையும் அறியாமல் உன்மேல் மையல் கொண்டேன்…
உயிராய் உண்மையாய் நேசிக்கிறேன் கடல் அளவு…
சகஜமாய் என்னுடன் பேசுவதை கூட தவிர்த்துவிட்டாயே…
அதுதான் அதிக வலியைத் தந்து ரணப்படுத்துகிறது…
தானாய் நானே வந்து பேசவும் பயம் தயக்கம்…
நான் பேசி நீ எரிச்சலடைந்தால் என்னால் தாங்க முடியாதுடா…
உன் சந்தோஷமே என் வாழ்வு…
அதற்காகத் தான் என்னைப் பிரிந்து நீ வாழும்
வாழ்க்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றேன்…
என்னுடன் பேசாமலிருந்தால் நீ சந்தோஷம் கொள்வாய் என்றால்
ஆயுள் முழுதும் உன்னுடன் பேச மாட்டேன்…
உன் மகிழ்ச்சி ஒன்றை தவிர வேறெதுவும் பெரிதில்லை….
என் உயிர், நான், இந்த உடல் எதுவும் பெரிதில்லை…
உன் சந்தோஷத்தின் முன்பு………..
நான் அழுதாலும் நீ சிரித்திருக்க வேண்டும்…
இதுதான் என் எண்ணம்…
நீ சிரிப்பதாய் இருந்தால்
கோடி முறை இறக்கவும் தயார்……..
{kunena_discuss:784}