அவளின் டைரியில் - மீரா ராம்
27.நிஜம் சிறிதும் இல்லையா???
சில நாள் மௌன விரதம் இருந்த போதே வலித்தது…
இப்போதோ பேசி வருடக்கணக்காகிறது….
இதை எங்கே போய் நான் முறையிட???
என்ன செய்தால் இப்போது நான் படும் காயம் ஆறும்???
காயமும் நீயே… மருந்தும் நீயே….
காயமாகத்தான் என்னுள் நீ இருப்பாயே தவிர
மருந்தாக நிச்சயமாய் நீ வரப்போவதில்லை…
உன் அன்பெனும் மருந்து கிடைக்க நான் கொடுத்து வைக்கவில்லை…
எனக்கு அந்த பாக்கியம் ஏன் இல்லாமல் போனது???
ஏன் ஏன் என்ற கேள்வி மட்டுமே என்னிடத்தில்…
பதிலே இல்லை உன்னிடத்தில்…
என்னை எவ்வளவு நேசித்தாய்…
அப்படி உருகி உருகி கதை பேசினாயே….
இன்று ஒரு வார்த்தை…
ஒரு பார்வை…
சின்ன சிரிப்பு…
ஏதும் இல்லாமல் போனதென் மர்மம் என்ன???
அன்று பேசியது, பழகியது, உருகியது, கொஞ்சியது,
மிரட்டியது, அரவணைத்தது, தவித்தது, துடித்தது
என அனைத்தும் பொய்தானா?..
பொய் மட்டும் தானா?
மெய் சிறிதும் இல்லையா??
அத்தனையும் நாடகமா?...
நிஜம் சிறிதும் இல்லையா???...
{kunena_discuss:784}