(Reading time: 2 - 4 minutes)

05. இளம்பூவை நெஞ்சில்...  - மீரா ராம்

உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது!!!…

Ilam poovai nenjil

மனதில் ஏனிந்த உற்சாகம்… எதற்காக…

தவித்து துடித்திருந்த மனதுக்கு என்ன நேர்ந்ததாம் திடீரென…

சொல்லித்தான் தெரியவேண்டுமா என்பது போல்

உனது ஓரிரு வார்த்தைகள் என்னைச் சேர்ந்ததோ இன்று…

பல நாள் கனவு ஒரு நாள் நனவென்று கேள்விப்பட்டதுண்டு…

எனில் இது என் கனவும் இல்லையே…

பின்னர் என்ன தான் சொல்வது நான்?

பேச்சில் கூட விலகி இருக்கும் நீதான்

இன்று உரிமையுடன் நெருங்கி வந்தாயா?

கிள்ளியும் பார்த்து வலியில் அழுவதற்கு பதில்

சிரிப்பு என்ற தொட்டிலில் நான் சிணுங்குவதும் ஏனோ?

சிறு குழந்தையாய் என்னை மாற்றிடும் வித்தையையும்

உனது இந்த மாயக் காதல் எங்குதான் கற்றதோ?

கெஞ்ச கெஞ்ச மிஞ்சும் நீயும் இன்று தானாய்

இறங்கி வருவதன் ரகசியமும் நானறிவேனோ?

ஹ்ம்ம்… என்னடா கண்ணா இது?

முறுக்கிக்கொள்ள மனமும் நினைக்காத வண்ணம்

பட்டென்று உன் வசம் என்னை இழுப்பதும் என்ன வசியமோ?

பின்னே எத்தனை நாளாயிற்று நீ உரிமையோடு என்னிடம் பேசி…

அலைக்கழிந்த மனதும் ஆழ்கடல் போல்

அமைதியடைந்து நித்திரை கொண்டுவிட்டதே…

சாரிடி என்று சொல்லிட்டால் ஆயிற்றா?...

முறைப்புடன் விறைப்பாக கேட்க நினைத்தாலும்

அப்படித்தானே ஆகிப்போனது ஒன்றுமே இல்லாது…

ஆம்… என் மனக்குரங்கும் வாலை சுருட்டிற்றே…

ஹ்ம்ம்… இல்லாத நிலையையும் தகர்த்து, இருக்கிறேன் என

உரைத்திட உன் பொல்லாக்காதலும் வெளிவருகிறதோ?

டி என்ற உன் உரிமையான அழைப்பில் சிக்கிக்கொண்டு

மீளமுடியாது திணறிக்கொண்டிருக்கையில்

என்னடி?... இன்னும் கோபமா?... என்ற உன் கொஞ்சல் கெஞ்சலில்,

மீண்டும் என்னை காதல் ஆழியில் ஆழ்த்திவிட்டாயே கண்ணா,

அளவில்லா ஆனந்தம் உள்ளத்தில் நிரம்பி வழிய

மெய்மறந்து உன்னில் மிதக்கிறேனோ என் கடல் ராஜா?...

நுரையாய் நான் சிதறி போய்விடினும்

உன்னில் கலந்த இன்பம் அதை உதறித் தள்ளிவிடாதோ?...

கரையில் பலநாள் காத்திருந்த வரத்திற்கு பலன் தானோ

இன்று நானும் உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது!!!...

பூ மலரும்……….

Ilam poovai nenjil 04

Ilam poovai nenjil 06

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.