10. இளம்பூவை நெஞ்சில்... - மீரா ராம்
என் ஜென்மமும் ஈடேறிடுமோ...!!!…
எனக்குள் உன் இனிய உதயம் தினம் தினம்
நிகழ்வதும் நகர்வதும் படர்வதும் கலப்பதும்
நாளெல்லாம் எனக்குள் உலாவருவதும்
புதுமைக்கே புதுமையை புகுத்தும் திருவிழா….
யாருக்கும் தெரியாமல் புக்கத்தின் நடுவே
ஒளித்து வைத்திருக்கும் உன் புகைப்படத்தை
கையிலெடுத்து ரசித்து ரசித்து உன்னை பார்ப்பது
நான் கடைபிடிக்கும் என் காதல் வழக்கம்…
இரவின் மடியில் தனிமை பிடியில்
நான் சிக்கிக்கொள்ளும்போதெல்லாம்
உன் முகத்தினில் என் பார்வையை
பரவவிடுவதோடு மட்டுமல்லாமல்
என் விரல்களாலும் வருட ஆரம்பிக்க,
ஏனோ கண் முன்னே உன்னை தீண்டும் இன்பம்
நான் உணர்கிறேன் அக்கணமே…
மெய் சிலிர்த்து உள்ளம் தவித்து
உன் நினைவில் நான் மூழ்க
புதியதோர் உலகத்திற்கே சென்றுவிடுவதாக
நான் காண்பதும் காதலின் மாயை தானோ?...
அறிந்துகொள்ள முனைந்ததில்லையடா கண்ணா…
தெரிந்து மட்டும் என்ன செய்யப்போகிறேனாம்?...
மீண்டும் உன்னை நினைத்து நான் மாயமாகி போவதை தவிர….
மெல்ல கனவுலகத்திலிருந்து வெளிவந்து விழி திறப்பவள்
கொஞ்சமும் யோசிக்காது உன்னை மறைத்திருக்கும்
புத்தகத்தை என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொள்கையில்
எங்கிருந்து தான் வருமோ அந்த சுகம்…. ஹ்ம்ம்…
உதட்டின் ஓரத்தில் தானாய் வந்து மோதிக்கொள்ளுமோ
உனக்கான என் புன்னகைக்காற்று….
மஞ்சள் முகத்தில் சற்றே வந்து உரசிக்கொள்ளுமோ
உனக்கான என் வெட்கப்பூக்கள்…
தூரத்தில் இருந்தாலும் அருகில் உன் சுவாசச்சூடும்
உன் இதயத்துடிப்பும் உணர்வதும் கற்பனை இல்லையே...
எனில் என்னருகில் தான் இருக்கிறாயா?...
பின் ஏனடா என்முன் வர மறுக்கிறாய்??…
பரிதாபம் என் மேல் எழவில்லையா?.?..
இல்லை இன்னும் என் காதல் உன்னை எட்டவில்லையா?...
படுத்தி எடுத்து புரட்டி பார்த்து ரசிக்கும் என்னவனே
உன்னை நான் நேரில் பார்த்து விகசிப்பதும் எப்போது?...
என் ஜென்மமும் அந்த நொடி ஈடேறிடுமோ??... என் ராஜா!!!!....
பூ மலரும்……….
{kunena_discuss:779}