(Reading time: 3 - 5 minutes)

12. இளம்பூவை நெஞ்சில்...  - மீரா ராம்

ஏக்கம் தீர்த்து வைக்க நீயும் வந்திடாயோ???!!!…

Ilam poovai nenjil

கண்ணாடிக்கு முன்னே சென்று நானும் நிற்க,

என் மனக்குரங்கும் துள்ளிக்குதித்து ஆட்டம் போடுகிறது,

ஒவ்வொரு உடையையும் எடுத்து என் மேல் வைத்து பார்க்கையில்…

இந்த தோடு நல்லா இருக்குமா?... என அணிந்து கொள்கிறேன்

பின் வேண்டாமென முகம் சுளித்து கழற்றியும் வைக்கிறேன்…

இப்படியே நேரமும் நகர, என்னைத்தேடி வந்த

அம்மாவின் உஷ்ணப்பார்வை என் மீது பட்டது புரிந்தது…

இருந்தும் என்ன செய்ய?... என்னால் இப்போது வரை ஒரு முடிவுக்கு வரமுடியவில்லையே..

கண்ணாடிக்கு அருகில் சென்றவள், மெல்ல உன்னை

என் மனத்திரையில் கொண்டு வர, தானாய் உதடுகள் மலர்ந்தது…

உனக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என எண்ணக்குதிரையை தட்டிவிட

அது தன் பாட்டுக்கு தனது பாதையில் கடிவாளமில்லாது பயணித்தது…

விடையை தெரிந்து கொண்டுவிட்ட சந்தோஷத்தில் ஓடிச்சென்று தேடுகிறேன்

ஆசை ஆசையாக வாங்கின அந்த புடவையை…

தேடல் கண்டுகொண்ட திருப்தி முகத்தில் பரவ, கைகள் தொடும் முன்பே

கண்கள் செவ்வனே அதனை வருடிப் பார்க்கிறது அவசரமே இல்லாது…

நூலுக்கும் வலிக்காது அதனை உடலில் சுற்றி அணிந்து,

முடியை தளர பின்னி, காதுகளில் ஜிமிக்கியும்,

கைகளில் கண்ணாடி வளையல்களும்,

நெற்றியில் ரத்தநிறப்பொட்டுமாய் வந்து எப்படி இருக்கிறேன் என

என் பிம்பத்தைப் பார்க்கையில், உனக்குப் பிடிக்கும் என்றே தோன்றியது…

அசத்தும் அழகாக இருக்கிறேனா என்று தெரியாது. - ஆனால்

உன் வசத்தில் இருக்கும் அழகாக மட்டும் இருப்பேன் என்றது மனமும்...

உன்னைப் பார்க்கும் நொடி எப்படி இருக்கும்????...

சிந்தனைக் கதவுகளை திறக்கையில், தானாய் என் கரங்கள்

முகத்தினை மூடிக்கொள்ளும் மாயமும் நானறியேன்…

அம்மாவிடம் கோவிலுக்கு சென்றுவருவதாக சொல்லிவிட்டு

வீட்டை விட்டு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தேன்…

இருபது நிமிட இடைவெளியில் கோவிலும் வந்துவிட,

கோபுரத்தை தரிசித்துவிட்டு உள்ளே சென்று என் ஸ்ரீராமனை சேவிக்க

உள்ளத்தில் எல்லையில்லா ஆனந்தமும் நிம்மதியும் ஒருசேர பரவியது…

சற்று நேரம் அங்கேயே அமர்ந்து வாசலையே பார்த்த வண்ணம்

நீ வரும் பாதை பார்த்து காத்திருந்தேன்…

நேரம் செல்ல செல்ல உன்னைப் பார்க்கும் ஆவல் பெருகிக்கொண்டே போக

என்னை எனக்கே கட்டுப்படுத்துவது சிரமமாகி போனதடா…

எப்போதடா வருவாய்?... என்றுதான் காண்பேன்??? உன்னை…

நானும் இந்த மையிட்ட கண்களில்…

தவித்து கரைந்து போகிறதடா இதயம்…

ஒருமுறை வந்துசெல்லடா என் செல்ல கண்ணா..

அழகிய திருமுகத்தினை சில விநாடிகள்

தரிசிக்க அனுமதித்திட ஏனடா தயக்கம்?...

ஜென்ம ஜென்மமாய் நெஞ்சோடு விரவியிருக்கும்

காதலுக்கும் முக்தி அளித்திட எண்ணமில்லையோ என் தேவா???...

உன் காதல் ஜூவாலையில் மெழுகென உருகி போகும் முன்,

உன் விழிகளோடு விழி கலந்திட ஏங்கும் எந்தன்

ஏக்கம் தீர்த்து வைக்க நீயும் வந்திடாயோ???... என் ராஜா!!!!

 

பூ மலரும்……….

Ilam poovai nenjil 11

Ilam poovai nenjil 13

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.