16. இளம்பூவை நெஞ்சில்... - மீரா ராம்
விடை சொல்லடா!!!…
ஆசைகளுக்கு வரையறை இருக்கிறதா?...
இருந்தாலும் தெரிந்து கொள்ளும் எண்ணம் இல்லை சிறிதும்…
உன் மேல் நான் கொண்டுள்ள ஆசைக்கும் எல்லைக்கோடுகள்
நான் வகுக்கவில்லை இந்த நொடி வரை… ஆம்…
மெல்லிய பூங்காற்று என்னைத் தீண்டி செல்லும்போதெல்லாம்
என் விழிகளுக்குள் நிறைந்து நிற்கிறாய்...….
உடலில் குடிகொண்ட உயிரென நீ சுவாசத்தில் கலக்கும்போது
மலரில் மறைந்திருக்கும் தேனென நானும் இனிக்கிறேன் இனிதாய்…
உதட்டில் பூத்த சிரிப்பென நீ முகத்தில் வலம்வரும்போது
மண்ணில் கலந்த மழைத்துளியாய் நானும் கரைகிறேன் அழகாய்….
எனக்குள் உன்னை நான் காண்கையில்
என்னையும் மீறி வியப்பு வெளிப்படுகிறது…
ஹ்ம்ம்… காதல்…
சொற்களால் என்னால் விவரிக்க இயலவில்லை…
எனினும் உன் வார்த்தையில் நான் காண்கிறேன் அதனை…
காதலுக்கு உருவம் இல்லை என்கிறார்கள்
எனில் என் முன் இருக்கும் நீ யாரடா காதலா?...
நீ வேறு காதல் வேறா?...
பிரித்துப் பார்த்திட முனைந்ததில்லை நானும் இதுவரை…
என் கண்ணன் தந்த காதலும் நீ…
என் காதல் தந்த காதலனும் நீ…
உன்னில் என்னை தொலைத்துக்கொண்டிருப்பவள் மேலும்
உருகி உருகி கரைந்தும் போய்விடுவேனோ?...
பேசேண்டா…
பிடிவாதம் பிடித்து என்னடா சாதிக்கப்போகிறாய்?...
மனக்கதவை திறந்து ஒருமுறை என்னையும் பாரேண்டா…
உன் பதிலுக்காக காத்திருக்கும் இந்த பாவையும் பாவமில்லையாடா?...
விடை சொல்லடா... என் ராஜா!!!....
பூ மலரும்……….
{kunena_discuss:779}