19. இளம்பூவை நெஞ்சில்... - மீரா ராம்
நித்தம் காதலிப்பதும் ஏனோ?...!!!
தகிக்கும் சூரியனிலும் உன் வெப்பம் இல்லை…
தணிக்கும் சந்திரனிலும் உன் குளிர் இல்லை…
எதிலுமே உனக்கு நிகர் யாருமே இல்லையடா…
நேசம் ஆகட்டும், கொண்ட பாசம் ஆகட்டும்
எதையுமே அளவாக காட்டத் தெரிந்திடாது
என் மன்னவனாகிய உனக்கு…
எனில் இதில் ஊடலுக்கும் கூடலுக்கும் மட்டும்
இடமில்லாது போய்விடுமா என்ன?...
ஒவ்வொரு முறையும் நீ ஊடல் கொள்ளும்போது
சிறுபிள்ளையின் நினைவு தான் எனக்குள் வரும்…
அப்படியே உனை அள்ளி அடுத்து கொஞ்சிட
விழையும் மனதை கட்டுப்படுத்திக்கொள்ள
நான் படும்பாடு சொல்லி மாளாது…
அந்த நிலையிலும் உன்மீது ஆசைதான் வருமே தவிர
கோபங்கள் ஏனோ வந்ததில்லை இன்றுவரை…
நீங்காமல் எனக்குள் கேட்டிடும் உன் குரலும்
நினைவை விட்டு அகலாமல் வீசும் உன் நியாபகத்தென்றலும்
எனை உன் வசமே வைத்திருக்கும் காந்தங்கள்…
ரசிக்கும் காதலும் ருசிக்கும் மோதலும்
நீ தந்தால் நான் மறுத்திடுவேனா என்ன?...
முட்டிக்கொண்டாலும் திட்டிக்கொண்டாலும்
கடைசியில் உன்னை கட்டிக்கொள்வதை தவிர
வேறு ஒரு மார்க்கமே எனக்கு தோன்றிடாது….
லூசு என்று உன்னை பலமுறை நான் அழைத்தாலும்
உண்மையில் லூசாகிப் போவது
இங்கு என்னையன்றி யாருமில்லை…
எங்கிருந்து தான் எனக்குள் உற்சாகம் பிறக்குமோ
உரிமையாக நீ அழைக்கும் “டி…..” என்ற ஓர் சொல்லில்…
அதிலும் “சொல்லுடி….” என்ற ஓர் வார்த்தை போதும்
நான் உன்னில் பித்தம் கொள்ள…
ஐயோ… நான் என் செய்வேனடா என் செல்லக்கண்ணா….
ஹ்ம்ம்…
என் சித்தம் கலைத்திட இப்படி
நீ நித்தம் காதலிப்பதும் ஏனோ?... என் ராஜா?!!!!....
பூ மலரும்……….
{kunena_discuss:779}