(Reading time: 2 - 3 minutes)

20. இளம்பூவை நெஞ்சில்...  - மீரா ராம்

எண்ணமில்லையாடா உனக்கு?….!!!…

Ilam poovai nenjil

கனவுகளில் வாழும் நிலை உன்னுடனாக இருக்கையில்

நனவுகளில் கூட மனம் அதையே நாடுகிறது

தன்னையும் அறியாமல்…

இந்த மோன நிலை எனக்கு நேர்ந்ததும்

வந்த மௌன நிலையும் நீடித்து நிற்கிறது

என்னையும் தாக்காமல்….

நினைவு காட்டில் உன்னை விதைத்து

மனதின் தோட்டத்தில் உன் காதல் தளிரை

நானும் காண்கையில்

இதயமெங்கும் உன் சுவாசப்பூ மலர்ந்து

என்னை கிறங்கடித்து தோற்கடிக்க,

தோல்வியின் பெயரில் உனைகட்டி தழுவுகிறேன்

நானும் நெஞ்சுக்குள் உலவும் நாணத்துடன்…

மந்தகாசம் சிந்திடும் உன் புன்னகை…

சுவாசம் நுழைந்திடும் உன் வாசனை…

நெஞ்சம் நிறைந்திடும் உன் திருமுகம்….

மஞ்சம் உறங்கிடும் உன் காதல்….

கேசம் கோதிடும் உன் கரம்…

நேசம் சொல்லிடும் உன் செய்கைகள்…

மயக்கம் கொடுத்திடும் உன் விழிகள்…

தயக்கம் வகுத்திடும் உன் நெருக்கம்…

ஹ்ம்ம்….

கண்மூடி நான் நின்றாலும்

எனக்குள் நான் உணர்பவைதான் இவை எல்லாம்…

எனக்குள் எப்படியடா புகுந்து கொண்டாய்?...

மாய மந்திர வேலை செய்தாயா? – இல்லை

காதல் தந்திர வேலை செய்தாயா?...

எதுவென்று உறைப்பாய் என்னிடத்தில்?....

சொல்லடா என் அழகு மன்மதா…

வருடிச்செல்லும் காற்றாய் உள்ளம் தீண்டி

திருடிச்சென்றாயாடா என்னை?...

கேட்கிறேனே சொல்லேண்டா பாவி…

திட்ட வைத்து வேடிக்கைப் பார்க்கிறாயே…

ஏனடா என் செல்லக்கண்ணா?...

அய்யோ…. 

வசீகரித்து கொல்லும் வஞ்சகா… - என்னை

ஸ்வீகரித்து கொள்ளும் எண்ணமில்லையாடா உனக்கு?... என் ராஜா….!!!

பூ மலரும்……….

Ilam poovai nenjil 19

Ilam poovai nenjil 21

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.