(Reading time: 2 - 3 minutes)

21. இளம்பூவை நெஞ்சில்...  - மீரா ராம்

நீயும் கூறாயோ?….!!!…

Ilam poovai nenjil

என்னவென்று சொல்லுவேன் நான்?.…

என் ஆழ்மனக்கடலின் ஆர்ப்பரிப்பையும்,

அது அள்ளி தெளித்திடும் சந்தோஷப்பூந்தூரலையும்,

எப்படி சொல்லுவது?...

வார்த்தைகள் கிடைக்காமல் சிக்கிக்கொள்கிறேன்

மகிழ்ச்சியின் வெள்ளத்தின் இடையே நானும்…

பூவாய் உள்ளம் மலர, அது பரப்பிடும்

உன் வாசமோ என் சுவாசத்தைத் தீண்ட

அக்கணமே மெய்மறக்கிறேன் நானும் என்னை…

ஒற்றை அழைப்பு இத்தனை பூரிப்பை கொடுத்திடுமா?

ஒற்றை குரல் இத்தனை உற்சாகத்தை பரிசளித்திடுமா?

தெரியவில்லையடா…

தன்னவனை தான் நேசிக்கும் மன்னவனை

இப்படித்தான் ஒவ்வொரு பெண்ணும் காதலிப்பாளா?...

உயிராய் சுவாசமாய் உணர்வாய்

எனக்குள் பரவி விரவி கிடக்கும் உன்னை

அப்படியே அள்ளி எடுத்து அணைத்திட துடிக்கிறேன் நான்

நீ என் பக்கத்தில் இல்லாத தருணத்திலும்…

ஒவ்வொரு நொடியும் உன் ஒவ்வொரு செய்கைகள்

எனக்குள் வந்து செல்லுகையில்

மூச்சே முட்டி விடுகிறதடா...

அதிலிருந்து வெளிவந்து சீரான சுவாசம்

நானும் உணர்வது குதிரைக்கொம்பாகி போகிறதே ஏனடா?...

காதல் கொண்ட பெண் மனம்

தன்னவனுக்காக உருகி கரைந்து போகையில்

இன்னதென்று பிரித்து சொல்லமுடியாத

இன்பத்தை நான் உணர்கிறேனடா என் செல்லக்கண்ணா……

எப்படியடா நான் உன்னை இப்படி காதலிக்கிறேன்?...

என்ன செய்து என்னை உன் வசமே வைத்திருக்கிறாய்?..

பாவம் பார்த்து இப்பாவையிடம் அதனை நீயும் கூறாயோ?... என் ராஜா?!!!

பூ மலரும்……….

Ilam poovai nenjil 20

Ilam poovai nenjil 22

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.