22. இளம்பூவை நெஞ்சில்... - மீரா ராம்
தயங்கி நின்றிடுவேனோ?….!!!…
இனம் புரியா சோகத்திலும்
மனம் பிரியா துக்கத்திலும்
உன்னையே நாடுகிறது பெண் உள்ளம்…
உன்னையே நினைப்பதும், உன் நினைவில்
கரைந்து கொள்வதுமாய் இருப்பது கூட
எனக்கு ஆறுதல் தருகிறதென்றால் நம்பமுடியுமா?... உன்னால்….
அப்படித்தான் நான் ஆகிப்போனேன்…
சந்தோஷத்தில் உன் அருகில் இருக்க விழையும் நெஞ்சம்
துன்பத்தில் உன் தோள் சாய்ந்து கொள்ள துடித்திடும்
மாயமும் நான் அறியேனடா….
உறவுகள் சூழ நானிருந்தாலும்
கனவுகள் ஆள வந்திடுவாய் நீயும் என்னில்…
மகிழ்ந்து கொள்ள ஆயிரம் காரணம் கிடைத்தபோதிலும்
இதழின் ஓரம் சின்னதாய் துளிர்த்து முடியும்
ஒரு புன்னகைக்கீற்று சொல்லிடும்
அது உனக்கானது என்று…
உதிக்கும் விடியலில் தொடங்கிடும்
உன்னுடனான என் பயணம்
பொழியும் நிலாமுற்றத்தில் நிறைவை எட்ட
தழுவிக்கொள்ளுமே அது என்னையும்,
உறக்கம் என்னும் வடிவில்…
தன்னை மறந்து உன்னையும் சற்று மறந்து விட்டேனோ
என்றெண்ணிய வேளையே, ஆழ்ந்த துயிலிலிருந்து
நொடிப்பொழுதில் என்னை வெளியே இழுத்துவிடுவாயேடா
கனவென்னும் ரூபத்தில்… உன்னருகிலே…
விடியும் வரை நீடிக்கும் இந்த நெருக்கம்
அதரங்களில் குடிகொண்ட சிரிப்பாய் வந்து
முடிந்திடுவது போல் தோன்றி மீண்டும்
ஆரம்பித்து வைத்திடுமே அன்றைய நாளின் துவக்கத்தினை…
தொடக்கமும் நீயாகி, முடிவாக மாறிடாது,
மீண்டும் தொடர்ந்திடும் பந்தமும் நீ கொடுத்திட்டாயே எனக்கு!!!…
இது என்ன வகை உறவடா என் செல்லக்கண்ணா?...
மங்கை இவளின் நெஞ்சத்தில் குடிகொண்டு
கண்களில் கனவென்னும் மாலை தாங்கிக்கொண்டு
எனக்காகவே காத்திருக்கும் என் அழகு மன்மதா…
இருகைவிரித்து நீயும் அழைத்திட
நாணத்தின் பின்னே நங்கை நானும்
தயங்கி நின்றிடுவேனோ?...…. என் ராஜா!!!…
பூ மலரும்……….
{kunena_discuss:1088}