(Reading time: 3 - 5 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 24 - ஒரு வாழ்த்து போதும் தானோ?….!!!… - மீரா ராம்

Ilam poovai nenjil

எண்ணங்களுக்கு எப்போதும் உன்னிடத்தில் ஓர் மையல் உண்டு…

பின்னே இருபத்து நான்கு மணி நேரமும், உன்னிடத்தில் அல்லவா இருக்கிறது…

மணி பன்னிரண்டை தொட இன்னும் ஒரு மணி நேரம் மீதம் இருந்த வேளை,

தானாகவே கண்களில் வந்து தஞ்சம் கொண்டது உறக்கம்…

சற்று நேரத்தில் அலைபேசி சத்தம் எழுப்ப, விழித்துக்கொண்டவளுக்கோ

தூக்க கலக்கம் தெளியவில்லை கொஞ்சமும்…

மணி என்ன?.... என கண்களை கசக்கிக்கொண்டே

மின்னிக்கொண்டிருந்த திரையைப் பார்க்க,

அது உனது பெயரைக்காட்டி குதூகலித்துக்கொண்டிருந்தது இசையுடன்….

நான் பேச ஆரம்பிக்கும் முன்பே, நீ பேசிவிட்டாய் என்னிடம்…

ஹ்ம்ம்…. முணகல் மட்டுமே என்னிடம் வர,

தூங்குறியா?... சரி தூங்கு… காலையில் பேசுறேன்…

சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்த்து நீ காத்திருக்க,

நன்றி உரைத்துவிட்டு சரி என்றேன் நானும்…

உன் மெல்லிய சிரிப்பு என் செவிமடலை வருடிச்சென்றதையும்

நான் உணர்ந்த வேளை, உனது அழைப்பு துண்டிக்கப்பட்டது…

அதே புன்னகையோடு படுத்தவள் அயர்ந்து

துயிலும் கொண்டேன் அடுத்த கணமே….

குருவிகளின் கீச் கீச் சத்தமும், சூரியனின் கதிரும் என்னை எழுப்ப,

எழுந்து கொண்டவளுக்கு இரவு நடந்தது நினைவு வந்தது…

நீதான் பேசினாயா?... வியப்பு எனக்குள்ளே எட்டிப்பார்க்க

முழங்கால்களை மடித்து அதில் தலைசாய்த்து சிரித்துக்கொண்டேன்

நானும் சத்தம் இல்லாது கன்னம் சிவக்க….

உதடுகள் தானாகவே மனதுக்குப் பிடித்த பாடலை முணுமுணுக்க,

நெஞ்சில் அலை போல் வந்து வந்து மோதியது உன் முகம்…

மாய உலகில் சஞ்சரித்துக்கொண்டே இருந்தவள்

திடீரென கண்கள் விரிய எனது தொடுதிரையில் கண்டேன்

உன் குறுந்தகவலை… சில்லென்ற தென்றல் காற்று தீண்டிச்சென்ற

சுகம் நானும் உணர, உனக்கு பதிலை அனுப்ப ஆரம்பித்தேன்…

பண்டிகையோ, சாதாரண நாளோ, உன் குறுந்தகவல்

காலையிலேயே நான் பார்த்திட்டால் எனக்கு அது திருவிழா நாள் தான்…

பிறந்த நாள் வாழ்த்துக்களடி என் சகி….

உன் வாழ்த்தை நொடிக்கொரு தரம் வாசித்துப்பார்த்து

என் அதரங்களில் புன்னகையை பூசிக்கொண்டேன் நானும் மனமாற…

ஹ்ம்ம்…. மறந்திருப்பாய் என்று நினைத்தேனே….

ஆனால் நீயோ நினைவு வைத்திருந்து

என்னை திக்குமுக்காட செய்துவிட்டாயே  

என் அழகு செல்லக்கண்ணா…

ஒருவருடம் முழுமைக்கும்

நெஞ்சுக்குள் நாளும் இந்த இன்ப சாரலை

நான் அனுபவித்து ரசித்திட

இந்த ஒரு வாழ்த்து போதும் தானோ???…. என் ராஜா!!!….

 

பூ மலரும்……….

Ilam poovai nenjil 23

Ilam poovai nenjil 25

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.