(Reading time: 2 - 4 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 30 - காதல் வரத்தையும் எனக்கு தந்திடுவாயா???... - மீரா ராம்

Ilam poovai nenjil

பல நாட்கள் தவம் போல் கழிந்து கொண்டிருக்க

இன்றும் அது தொடர்கிறது வரத்தை எதிர்நோக்கி….

வரம்….. என்ன வரம் கேட்கப்போகிறேன்?...

எதற்காக இந்த தவம்?...

காரணமும் சொல்ல வேண்டுமாடா என் கண்ணா?...

வஞ்சி இவள் நெஞ்சில் ஊஞ்சலாடும் உன் முகம்,

மறதி இல்லாது யுவதி நேசித்திடும் உன் நினைவு,

காதோரம் ரீங்காரமிடும் உன் இனிய குரலோசை…

இதழ்களின் ஓரத்தில் நிற்கும் உன் பெயர்…

விரல்கள் கிறுக்கிடும் உனக்கான கவிதை…

இவை அனைத்தும் சொல்லவில்லையா?...

என் இதயம் துடித்து உன்னை அழைத்திடுவதை!!!!….

கண்ணே மணியே முத்தே என்று கொஞ்சிட வேண்டாம்….

என் கண்ணுக்குள் இருக்கும் கருவிழியாய் நீ இருந்திட்டால் போதும்….

டீ சொல்லி உரிமை எதுவும் நிரூபித்திட வேண்டாம்

என்னடா என்று ஓர் வார்த்தை கேட்டிட்டால் போதும்….

உபசரிப்போ, அக்கறையோ நீ காட்டிட வேண்டாம்…

நான் காட்டிடுகையில் மறுக்காமலிருந்தால் போதும்…

அடிக்கடி அழைத்து பேசிட வேண்டாம்…

நான் அழைத்திடுகையில் அதனை ஏற்றிட்டால் போதும்…

சண்டை போட்டு விலகி இருக்க வேண்டாம்…

மாறாய் கோபம் கொண்டு திட்டி தீர்த்திட்டாலும் போதும்…

சொற்களை அதிகமாய் பிரயோகப்படுத்திடல் கூட வேண்டாம்…

என் காதலை நான் கொட்டும்போது தடுத்திடாமல் இருந்தால் போதும்…

உள் மன உணர்வுகளை நீ வெளிப்படுத்திட வேண்டாம்…

என் ஆழ் மன உணர்வுகளை அமிழ்த்திடாமல் இருந்தால் போதும்….

என்னை நீ ரசித்திட வேண்டாம்…

ஓர் முறை நினைத்திடு அது போதும்…

என் இதழில் நீ சிரிப்பை ஊற்றிட வேண்டாம்…

நான் அழுகையில் தோள் தந்திடு அது போதும்…

வழியும் விழிநீரும்

விரல் கோர்க்க துடிக்கும் கரமும்

உள்ளம் சேர துடிக்கும் காதலும்

உன் கண்களுக்கு புலப்படவில்லையாடா….

பாதி மாதமும் கழிந்த நிலையில்

இன்னமும் தொடரும்

உன் மௌன விரதம் கலையாததும் ஏனோ???....

விடியும் நாள் என் மனதிலும் ஒரு புது விடியலை ஏற்படுத்திட

காதல் வரத்தையும் எனக்கு தந்திடுவாயா???... என் ராஜா!!!...

பூ மலரும்……….

Ilam poovai nenjil 29

Ilam poovai nenjil 31

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.