(Reading time: 2 - 3 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 34 - காதல் அருமருந்தை தந்திடுவாயாடா??? - மீரா ராம்

Ilam poovai nenjil

நேற்று நுழைந்தாய் என் நெஞ்சத்தில்…

வேற்று சிந்தனை இல்லாது போனேன் இன்று நிஜத்தில்….

காற்று கூட நோக செய்கிறதோ என்னை

ஊற்று போல பெருகிடும் உன் எண்ணத்தால்…

உள்ளத்தில் குடி கொண்ட கவலை

நொடிப்பொழுதில் மறைந்து போன மாயமென்னடா கண்ணா?...

எதிர்பார்ப்பு இல்லாத நேரத்தில் என்னை

உன் அன்பெனும் வெள்ளத்தில் மூழ்க செய்யும் என்னவா…

எதிர்பார்த்து காத்திருத்கும் தருணத்தில் என்னை

தள்ளி நிறுத்தி தனிமையை பரிசளிப்பதும் ஏனடா?...

அதனால் கோபங்கள் உதித்த போதும்

சூரியனைக் கண்ட பனி போல

அனைத்துமே உன் அடுத்த வேளை வார்த்தையில்

உருகி கரைந்து போய் விடுகிறது அக்கணமே…

ஏன்?... என்னாச்சு?... என்று கேட்ட போது பதில் இல்லை…

மேற்கொண்டு ஒரு மணி நேரம் அமைதி காத்தாய்

அதற்கு மேலும் முடியாது போகவே

எங்க போயிட்ட?...

என்னாச்சு?....

உடம்பை பார்த்துக்க லூசு…

சாப்பிடு ஒழுங்கா நேரத்துக்கு…

சில வார்த்தைகள் தான்…

ஏனோ அதை மறுநாள், நான் என் கைபேசித் திரையில்

காணும்போது என் முகத்தில் தெரிந்த ஒளிக்கற்றையை

நான் மறைக்கப் படாதபாடுதாண்டா பட்டேன்…

இதில் ஒரு டி இல்லை… ஒரு டா இல்லை…

எனினும் அதைப் பற்றிய எண்ணமே இல்லை எனக்கு…

நீ விசாரித்தாயே… அது ஒன்று போதாதா எனக்கு?....

இத்தனை அன்பையும் ஏனடா உனக்குள்ளேயே மறைத்து புதைக்கிறாய்?...

என் உடல் நலம் குன்றும் தருவாயில் மட்டுந்தான்

உன் நேசம் சீறிப்பாய்ந்து, அணையை உடைத்துக்கொண்டு வெளிவருமா?...

எனில் காலம் முழுவதும் நோய்வாய்ப்படவே விரும்புவேனடா நானும்

உன் அன்பெனும் மருந்து என்னை சேருமானால்…

சொல்லடா என் அழகு செல்லக்கண்ணா….

பித்தான இந்த பேதை நெஞ்சத்துக்கு

உன் காதல் அருமருந்தை தந்திடுவாயாடா?... என் ராஜா!!!!

பூ மலரும்……….

Ilam poovai nenjil 33

Ilam poovai nenjil 35

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.