(Reading time: 2 - 3 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 39 - நீ அறிவதும் எப்போதடா???...!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

ஆழ் மனதில் புதைந்து கிடக்கும் வார்த்தைகள்

உன் விழி பார்க்கையில் அப்படியே தொய்ந்து

இதழ் வழி வெளிவர மறுத்து நிற்கையில்

செய்வதறியாது திகைத்து தான் போகின்றேன் நானும்….

அடுத்து என்ன செய்வது?... என்ற கேள்விக்குறி

மட்டுமே என்னிடத்தில் பதிலாய்….

இது இன்று நேற்றல்ல…

உன்னைக் காணும் ஒவ்வொரு வேளையும்

எனக்குள் ஒரு மாபெரும் பனிப்போரே நிகழத்தான் செய்கின்றது…

வார்த்தையினை மௌனமானது ஜெயித்துவிட

இறுதியில் அங்கே தோற்றுப் போய் நிற்பது

என் காதலின் போராட்டம் மட்டுமல்ல…

உன் விழியில் தொலைந்த நானும் தான்….

ஆனாலும் அதில் ஓர் சுகம் நான் உணர்கிறேன்

என்று சொன்னால் நீ நம்பிடுவாயா?...

நீ சிரித்தாலும் நிதர்சனம் அதுவே…

ஆம்… நான் தோற்றுப்போவது என்னவனிடத்தில் தானே…

அந்த மகிழ்ச்சி என் மனதில் ஊற்றுப்போல் பெருகிடாதா?...

சொற்கள் இல்லாது நான் உன் முன்னே திணறி நிற்கையில்

உன் விழி என்னும் தூண்டில் எனை மீட்டு

மீண்டும் உன்னிடத்திலே மூழ்கச் செய்யும் விந்தையினை

நீ அறிந்திருக்கமாட்டாயடா என் செல்லக்கண்ணா…

எனக்கே எனக்கான உன் பார்வை…

அதில் சிக்கி வெளிவர விரும்பாத இந்த பாவை…

எண்ணிப்பார்க்கையில் சிரிப்பு வந்தாலும்

உடன் நாணமும் எட்டி தான் பார்க்கின்றதடா ராஜா…

உன்னால் அதை உணர முடிகின்றதா?..... சொல்லடா…

கேள்வி கேட்டு தவிக்கும் இவளின் மனதினை

நீ அறிவதும் எப்போதடா?...

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…

எப்படி இருக்கு இந்த வாரக் கவிதை….

படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்…

நன்றி…

மீண்டும் அடுத்த வாரம் இக்கவிதைத் தொடரில் சந்திக்கலாம்…

பூ மலரும்

Ilam poovai nenjil 38

Ilam poovai nenjil 40

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.