கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 42 - துவக்கமும் யாரறிவாரோ….!!!! - மீரா ராம்
நீர்த்துளிகள் ஒன்றிரண்டு முகத்தினில் நிறைந்திருக்க
என் கவனமோ ஈரம் தோய்ந்த கூந்தலை துவட்டுவதில் நின்றது…
நேரம் வேற ஆச்சு… போச்சு போச்சு…
வாய் விட்டு நான் கூறிவிட்டு கண்ணாடியைத் தேடி ஓடி
அதன் எதிரினில் நிற்க, அதில் பிரதிபலித்த்து என் பிம்பம்…
உன்னை பைத்தியம்ன்னு அவர் சொல்லுறதுல தப்பே இல்லை
கனா கண்டுட்டே இருந்தா இப்படித்தான்…
காலையில எழுந்ததுல இருந்து கோலம் போட்டு
வந்த வரைக்கும் எல்லாமே தாமதம் தான்…
வெளிப்படையாகவே என்னை நானே திட்டிவிட்டு
கூந்தலை அப்படியே அள்ளி முடிந்து கிளம்ப எத்தனிக்கையில்
ஏனோ கால்கள் நகராது அங்கேயே நின்றது…
சட்டென நானும் திரும்பி பார்த்திட
கண்ணாடியில் தெரிந்தது உன் பிம்பம்…
இமைக்காமல் நான் அதனை பார்த்திட
இருகரங்களையும் சேர்த்து மார்பின் குறுக்கே
கட்டிக்கொண்டு நின்றாய் நீ அமைதியாக….
உன் பார்வை என் கூந்தலில் பதிய
புரிந்து போனது எனக்கு…
மெல்ல தலை கவிழ்ந்தவள், “நேரமாச்சு அதான்…”
திக்கித்திணறி சொற்களை வெளிவிட,
மீண்டும் மௌனம் உன்னிடத்தில்…
சட்டென கூந்தலை அவிழ்த்து ஈரத்தை துடைத்து
உலர வைத்து சில நிமிட இடைவெளியில்
மறுபடியும் கண்ணாடி முன் நான் வந்து நின்றிட
உன் முகமோ மலர்ந்திருந்தது…
கூடவே, “இப்பதான் நீ என் சகி…” என்ற காதல் வார்த்தைகளும்
நீ கூறிட, வெட்கமும், கோபமும் உதித்தது என்னிடத்தில்..
அதனை ரசித்தவாறே, நீ இருக்க,
அதன் வீரியத்தை தாங்காது
“ஐயோ போதும்…” என நான் சிணுங்கி கண் மூடிட
உன்னிடமிருந்து எந்த பதிலும் இல்லை…
மெல்ல விழி திறந்து பார்க்கிறேன்
கண்ணாடியில் தெரிகிறது எனது பிம்பம்…
ம்ம்ம்ம்…. என்னை அறியாது உதடுகள் உச்சரிக்க
இதழ்கள் சிறிதுநேரத்தில் சட்டென மலர
உன்னை சந்திக்க விருக்கும் மணித்துளிகளை
எண்ணி அகமகிழ்ந்தேன் நான்….
சில நிமிட பயணத்தில் உன்னைக் கண்டிடுவேன்
எனினும் அந்த இடைவெளி என்னை வாட்டி வதைப்பதும்
ஏன் தானோ கண்ணா?...
உன் கை கோர்த்து நான் செல்லும் பயணமும் என்றோ?...
அதன் துவக்கமும் யாரறிவாரோ?... என் ராஜா….!!!!!
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…
எப்படி இருக்கு இந்த வாரக் கவிதை….
படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்…
பூ மலரும்…
{kunena_discuss:1088}